THOWHEED GUIDE

Buscar

Avoid Hiring Muslims



Yasser Arafat
Photo Credit: Canadapest
Unfortunately the United States still considers Islam a religion rather than a violent political organization so anti-discrimination laws may prevent you from overtly refusing to hire a Muslim candidate. The best bet is to avoid interviewing anyone who you suspect may be a Muslim. The reason is that once you have interviewed a Muslim and you don't give him or her a job, you are likely to get sued for religious discrimination (1).

There are many reasons not to hire Muslims; one of them is that Muslims like to apply for jobs their religion forbids them to do or for which they are not suited or qualified. Another is that it costs more to accommodate Muslims, a lot more: Five prayer times a day, wash basins, separate eating rooms, Muslim sensitivity training for non-Muslim employees, trying to find other work when they refuse to do the job which they were hired to do (2), etc.

The main reason not to hire Muslims is that you will encourage more to come to America. Imagine that you are a restaurant owner and you are stupid enough to hire Muslims. If enough idiots like you hire Muslims your community will have enough Muslims to cause the building of a Mosque. What's wrong with that? How about they try to put you out of business because your restaurant serves alcohol and you are too close to their mosque (3)?

While Jews have been in America since the founding of our country, you can't tell that they are here except for their great contributions to American culture. Muslims have only been coming in recently and already they want to change how WE live.

To prevent interviewing a Muslim, screen the resumes carefully to weed out possible problem candidates and if possible hire a private investigation firm. It's cheaper doing that than hiring a Muslim and reaping the losses from doing so. You are less likely to get sued for not hiring a Muslim if you don't actually talk to one.

Disclaimer:

To keep oneself in the least legal hot water, you are urged to consult a specialist in employment law before establishing a screening program or hiring anyone. If you do not want to hire Muslims do everything you can to avoid interviewing them. If it cannot be helped and you find yourself with an appointment with a fellow named Mahmud bin Azz, for example, as an added precaution try to have a photo of Yasser Arafat (autographed if you can fake it) behind you when conducting the interview. Hopefully when you turn down Mahmud for the job of bacon slicer he won't sue you for discrimination.

இஸ்லாம் உலகாளும் சக்தியாக மாறவேண்டும் என்பதற்காக உயிரையே தியாகம் செய்த பட்டியலில் சேர்த்துகொண்டாய்.....பழனிபாபா: விதையாய் விழுந்தவர்!

1988 ஆம் ஆண்டு...
அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா பெல்லோஷிப் பல்கலைக்கழகத்தின் டெல்டா அரங்கு நிரம்பி வழிந்தது.

கறுப்பர், வெள்ளையர், ஆண்கள், பெண்கள், மாணவ-மாணவியர் என ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த பெருங்கூட்டத்திற்கு நடுவே
கம்பீரமாக எழுந்து நின்று உரையாற்றினார், அந்த இளம் தமிழர்.

சுமார் 13 மணி நேரம் அவர் ஆற்றிய தொடர் சொற்பொழிவில் அமெரிக்கர்கள் சொக்கிப்போனார்கள்.

ஆங்கில இலக்கியங்களைப் பற்றிய அவரது ஆழமான அறிவும்; பைபிளைப் பற்றிய அவரது தெளிவான புரிதலும்; திருக்குர்ஆன் ஒளியில் அமைந்த அவரது பேச்சின் சாரமும் கண்டு அனைவரும் வியந்தனர்.

தனது அறிவாலும், மேடை ஆளுமையாலும் அமெரிக்க மக்களின் அபிமானத்தைப் பெற்ற அவர், 'தவறுகளைக் கண்டு திமிறி எழும்' தனது இயல்பு குணத்தை அங்கேயும் வெளிப்படுத்தினார்.

அமெரிக்கர்களிடையே நிலவும் ஒழுக்கச்சீர்கேட்டையும்,கலாச்சார சீரழிவுகளையும் சுட்டிக்காட்டிய அவர், ஒழுக்கவியல் நிறைந்த வாழ்க்கைத் தத்துவத்தை எடுத்துரைத்தார். எளிதில் உணர்ச்சிவயப் படக்கூடியவராகவும், முன் கோபக்காரராகவும் இருந்த அவர், தனக்கேயுரிய வேகத்தில் அமெரிக்கர்களைச் சாடியபோதும், அம்மக்கள் அவர் மீது வெறுப்படையாமல், அவரது கருத்தில் இருக்கும் உண்மைகளையும், நியாயத்தையும் உணர்ந்து தங்களைச் சுயபரிசோதனை செய்துகொண்டனர்.

பல்கலைக்கழக நிகழ்ச்சியோடு அவரைத் திருப்பி அனுப்பாமல், பிலடெல்பியா மாகாணம் முழுவதும் அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தனர். எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று எழுச்சியுரையாற்றினார்,அந்தத் தமிழர்.

அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அமெரிக்கர்கள் பலர் குடிப்பதை மறந்தார்கள்;தீய பழக்கங்களை விட்டு விலகினார்கள்;ஒழுக்கவியலை நோக்கி நகர்ந்தார்கள்; இறுதியில் இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்கள். தமது ஒரு சுற்றுப்பயணத்திலேயே இப்படியொரு அழுத்தமான தாக்கத்தையும், ஆக்கப்பூர்வமான மாற்றத்தையும் ஏற்படுத்திக்காட்டிய அந்த இளம் தமிழர் வேறு யாருமல்ல; அவர்தான் புரட்சியாளர் பழனிபாபா.

1997, ஜனவரி 28 ஆம் நாள் பழனிபாபா படுகொலை செய்யப்பட்டார்.'நான் வாழ வந்தவனல்ல; மாள வந்தவன்' என்று செல்லுமிடமெல்லாம் முழங்கிய அவர் சொன்னது போலவே மாண்டுபோனார்.

அவர் மறைந்து இன்றோடு 14 ஆண்டுகள் கடந்து விட்டன. அவரது பெயரை உச்சரிக்கவோ; அவரது பங்களிப்புகளை நினைவு கூரவோ; அவரது தியாகங்களைப் போற்றவோ இன்றைய இயக்கங்களுக்கு விருப்பம் இல்லை.

இரத்த தான விழாக்களில் மூழ்கிப் போயிருக்கும் இயக்கங்கள், 'முஸ்லிம்களின் இரத்தம் குடித்த இந்துத்துவ மதவெறிக்கு எதிராக காலமெல்லாம் களமாடிய அந்தப் போராளித் தலைவருக்கு' ஒரு நினைவேந்தல் கூட்டத்தைக் கூட எடுக்கவில்லை.

பழனிபாபா என்றால் கலவரத்தை விதைத்தவர்; இளைஞர்களை வழி கெடுத்தவர்; தவறான முன்னுதாரனங்களுக்கு உரியவர் என்றெல்லாம் அவர் குறித்து மோசமான சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. அவரது பன்முக ஆற்றலை மறைத்து, அவரை வன்முறையாளராகக் காட்டும் புனைவுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தகையச் சித்தரிப்புகளை உடைக்கவோ, புனைவுகளை முறியடிக்கவோ இங்கே எந்த இயக்கமும் தயாராக இல்லை.

பாபாவின் பாசறையில் வளர்ந்த 'மக்கள் ஜனநாயகக் கட்சி'யினர் மட்டும் தங்களின் வலிமைக்கேற்றவாறு ஆண்டுதோறும் புதுஆயக்குடியில் அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். ஆனால், பாபாவின் பேச்சையும், எழுத்தையும்,சிந்தனையையுமே இன்றைய தமது செயல் திட்டமாகக் கொண்டு இயங்கும் பெரிய அமைப்புகள் அனைத்தும், அவரை நினைவு கூராமல் தவிர்த்து வருகின்றன.

இன்றைய இயக்கங்களின் பேச்சும், செயல்பாடும், இலக்கும் இன்றைய இயக்கங்களை வழிநடத்தும் தலைவர்களின் சிந்தனையில் உதித்தவை அல்ல.

இன்றைய தலைவர்கள் எதையெல்லாம் பேசுகின்றார்களோ; எந்த செயல் திட்டத்தின் அடிப்படையில் இயங்குகின்றார்களோ; எந்த இலக்கை நோக்கிப் பயனிக்கின்றார்களோ அவற்றையெல்லாம் 25 ஆண்டுகளுக்கு முன்பே பேசியவர்; இயங்கியவர்; பயணித்தவர், பழனிபாபா.

முஸ்லிம்கள் என்றாலே அவர்கள் தங்களின் பிரச்சனைகளுக்காக மட்டுமே போராடுபவர்கள் என்ற கருத்து நிலவிய காலத்தில்,
1980 களிலேயே வெகுமக்களுக்காகக் குரல்கொடுக்கும் மனித உரிமைப் போராளியாக விளங்கினார், பாபா. பேராசிரியர். கல்யாணி போன்ற மனித உரிமை ஆர்வலர்களுடனும், PUCL போன்ற மனித உரிமை அமைப்புகளுடனும் இணைந்து, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார்.

நுண்ணிய தளங்களில் இந்துத்துவத்திற்கு எதிராக அழுத்தமானப் பதிவுகளைச் செய்து வரும் பேராசிரியர்.அ.மார்க்ஸை இன்றைய தமிழ் முஸ்லிம் சமூகம் நன்றி உணர்வோடு பார்க்கிறது. ஆனால் தமிழக முஸ்லிம்களுக்கு பேராசிரியர் அ.மார்க்ஸ் என்றால் யாரென்றே தெரியாத ஒரு காலத்தில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே அவரைச் சரியாக இனம் கண்டு அடையாளப்படுத்தியவர், பாபா. 'இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்' எனும் தலைப்பில் அ.மார்க்ஸ் எழுதிய நூலை வெளியிடுவதற்கு பெரும் துணை புரிந்தார், பாபா.

முஸ்லிம்களோடு உறவாடும் பிற சமய-சார்பற்ற தோழமை சக்திகள் பலர் இருந்தாலும், ஆபத்தான வேளைகளில் முஸ்லிம்களின் குரலாக ஒலிக்கும் அ.மார்க்ஸ் போன்றவர்கள் அதில் தனிச்சிறப்பு உடையவர்கள் என்பதை பாபா மிகச்சரியாகவே கணித்துள்ளார். பாபாவின் கணிப்பு எவ்வளவு தொலைநோக்குடையது என்பதை, அ.மார்க்ஸின் இடையறாத களப்பணிகளில் இருந்து நாம் உணர்கின்றோம்.

ஜெயலலிதா ஆட்சியில், காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட போது, நீதிமன்றம் நடந்து கொண்ட முறை மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. சங்கராச்சாரியாருக்கு ஆதரவான நீதிபதிகளின் ஒருபக்கச் சார்பு கடும்கண்டனத்திற்குள்ளானது. சில ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற இந்த நிகழ்வை, பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே கணித்து முன்னறிவித்தவர் பாபா.

சங்கராச்சாரியாரைக் கொலை செய்ய சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பாபா ஒரு முறை சிறையிலடைக்கப் பட்டார். கைதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரும் படி பாபாவிடம் பலரும் வலியுறுத்தினர். அப்போது பாபா, 'உயர்நீதிமன்ற நீதிபதி சங்கராச்சாரியாரைச் சந்தித்து ஆசி வாங்கியிருக்கிறார். அப்படிப்பட்டவர் எப்படி எனக்கு நீதி வழங்குவார்' என்று கேள்வி எழுப்பினார். அந்த வகையிலும் பாபாவின் கணிப்பு உண்மையாகிவிட்டதை நாம் நடைமுறையில் கண்டு வருகின்றோம்.
அரசியல் - சமூகப் பணிகளோடு இஸ்லாமிய மார்க்கக் கொள்கைகளிலும் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார், பாபா. பல இஸ்லாமிய கொள்கை விளக்கக் கூட்டங்களில் பங்கேற்று சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சுன்னத்வல் ஜமாஅத் கொள்கைத் தளத்தில் நின்று தமது இஸ்லாமியக் கருத்துக்களை எடுத்துரைத்தார். அதே சமயம் முஸ்லிம்களிடையே நிலவும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் தீவிரமாக முழங்கினார்.

அவரும் வட்டி, வரதட்சணை, அனாசாரம் போன்ற சமூகக் கொடுமைகளை கடுமையாகச் சாடினார். எனினும், அவர் ஒருபோதும் மார்க்கத்தையும், அரசியலையும் போட்டுக் குழப்பிக் கொண்டதில்லை; முஸ்லிம் ஜமாத்துகளைக் கூறு போட்டதில்லை; ஒரே தெருவில் போட்டியாக இன்னொரு பள்ளிவாசலை உருவாக்கி சமூகத்தில் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்தியதில்லை. அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஜமாத்துகளின் ஒருங்கிணைப்பையும், முஸ்லிம்களின் ஒற்றுமையையுமே வலியுறுத்தினார்.

பாபாவின் இதழியல் மற்றும் எழுத்துப் பணிகளும் அவரது தொலைநோக்குக்கு சான்றாக விளங்குகின்றன. கிறிஸ்தவம் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்ட பாபா, 'பைபிள் ஒரு ஆய்வு' என்னும் நூலை வெளியிட்டார். கிறிஸ்தவ பாதிரியார்களுடன் விவாதங்களிலும் ஈடுபட்டார். அது கிறிஸ்தவத்திலும், பைபிளிலும் அவருக்கு இருந்த ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்தியது. 'ராமகோபாலைய்யருக்கு மறுப்பு' எனும் தலைப்பில் பாபா எழுதிய நூல் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாபர் மஸ்ஜித் தொடர்பாக ஆங்கிலத்தில் ஒரு நூலை எழுதினார், பாபா.

'புனிதப் போராளி', 'அல்-முஜாஹித்', 'முக்குல முரசு' போன்ற பத்திரிகைகளை நடத்திய பாபா, அவற்றில் அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதினார். நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளையும், அரச அடக்குமுறைகளையும் 'புனிதப் போராளி' மூலம் அம்பலப்படுத்தினார்.
இவ்வாறு, மனித உரிமை அமைப்புகளுடன் தொடர்பு; பேராசிரியர்.அ.மார்க்ஸ் போன்றவர்களுடன் நட்பு; மூட நம்பிக்கை எதிர்ப்பு; சமூகத் தீமைகள் ஒழிப்பு; நூல்கள் மற்றும் இதழ்கள் மூலம் முஸ்லிம்களின் உரிமைகளைப் பேசும் ஊடகப் பங்களிப்பு ; பிற சமய அறிஞர்களுடனான உரையாடல் மூலம் இஸ்லாமிய அழைப்புப் பணி என எந்த செயல் திட்டங்களின் அடிப்படையில் பாபா இயங்கினாரோ, அவை அனைத்தையும் ஒன்று விடாமல் காப்பியடித்து, இன்றைய முஸ்லிம் இயக்கங்கள் இயங்கி வருவதையும், செயல் திட்டங்களைக் கற்றுத்தந்த பாபாவை மட்டும் மறந்து விட்டதையும் இன்று காண்கின்றோம்.

பாபாவின் சமூகப் பங்களிப்புகளை நினைவுகூரும் கடமையிலிருந்து இயக்கங்கள் தவறி விட்டாலும், இளைஞர்கள் தவறமாட்டோம் என்பதை எடுத்துரைக்கவே பாபாவை மறுவாசிப்பு செய்கின்றோம். ஏனெனில், பாபா இளைஞர்களைத்தான் அதிகம் நம்பினார். இளைஞர்களையே மிகவும் விரும்பினார். 'வரலாறு என்னை விடுதலை செய்யும், வரும்காலம் என் சார்பில் வஞ்சமெடுக்கும்' என்று மேடைகள் தோறும் முழங்கினார். நமக்காக முழங்கியவரை, நமது விடியலுக்காகஏங்கியவரை நினைவு கூராமல் விட்டால் அது நன்றி கொன்றதாக ஆகிவிடும். ஆகவே, பாபாவை அறிந்து கொள்வோம். அடுத்த தலைமுறைக்கும் அவரை எடுத்துச் செல்வோம்.

1950 நவம்பர் 14 ஆம் நாள், என்.வி.முஹம்மது அலி - கதீஜா பீவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் பழனிபாபா. அஹமது அலி என்பது இயற்பெயர். ஆனால், 'பழனிபாபா' என்ற அடைமொழியே பின்னாளில் அவரது பெயராக மாறிப்போனது. பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் அமைந்துள்ள புதுஆயக்குடி என்னும் கிராமம் தான் பாபாவின் தாய் வழிப் பூர்வீகமாகும். பாபாவின் தந்தை நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சார்ந்தவர். ஊட்டியில் உள்ள ஆங்கிலப்பள்ளி ஒன்றில் கல்வி பயின்று வந்த பாபாவும், அவரது சகோதர சகோதரிகளும், பெற்றோரின் மறைவுக்குப் பின் புது ஆயக்குடியில் உள்ள தாய்மாமா அப்துல் ரஹ்மான் அவர்களின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர்.

பழனி ஆண்டவர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பாபா, கல்லூரி நாட்களிலேயே பொது வாழ்வில் ஈடுபடத் தொடங்கினார். புது ஆயக்குடியில் நைனா முகம்மது என்பவர் தலைமையில் நடைபெற்ற முஸ்லிம்லீக் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியதுதான் பாபாவின் முதல் மேடை அனுபவமாகும்.

கிறிஸ்தவப் பள்ளிக் கூடத்தில் ஆங்கில வழிக்கல்வி பயின்றதனால் ஆங்கிலப் புலமை மிகுந்தவராகப் பரிணமித்தார் பாபா. எதையும் எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றலுடையவராகவும்; நுனிப்புல் மேயாமல் ஆழ்ந்து பார்க்கும் அறிவுடையவராகவும்; துணிவையும், மனோ தைரியத்தையும் இயல்பாகக் கொண்ட தன்னம்பிக்கை மனிதராகவும் சிறந்து விளங்கிய அவர், அத்தகைய பிறவி குணத்தால் மிக வேகமான வளர்ச்சியை அடைந்தார்.

இந்துத்துவ எதிர்ப்பு; சிறுபான்மையினர் பாதுகாப்பு; உழைக்கும் வர்க்கச் சார்பு; முஸ்லிம் சமுதாய விழிப்புணர்வு; ஒடுக்கப்பட்டோர் அரசியல் விடுதலை; இஸ்லாமிய கருத்தியல் குறித்த பரப்புரை என தனது கொள்கைகளை வரையறுத்துக் கொண்ட அவர், அக்கொள்கைகளின் அடிப்படையில் மிகத் தீவிரமாக களமாடினார். தமிழகத்தில் அவர் பயணிக்காத கிராமங்களே இல்லை. தமிழகத்தின் எல்லைகளைத் தாண்டி இந்தியா முழுவதும் வலம் வந்தார். இந்தியாவைக் கடந்து அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என நாடு நாடாகச் சுற்றினார். அவ்வாறு அவர் சென்ற இடமெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.
பாபாவின் தனித் திறமைகளினாலும், நாவண்மையினாலும் ஈர்க்கப்பட்ட அரசியல் தலைவர்களும், சமூக சிந்தனையாளர்களும் அவருக்கு நெருக்கமானார்கள். இந்திராகாந்தி முதல் எம்ஜிஆர் வரை எல்லா அரசியல்வாதிகளுடனும் பாபாவுக்குத் தொடர்பு இருந்தது. டாக்டர் ராமதாஸ் முதல் டாக்டர் சேப்பன் வரை எல்லா சமூகத் தலைவர்களுடனும் அவருக்கு உறவு இருந்தது.அ.மார்க்ஸ் முதல் அனீஸ் பாத்திமா [நர்கிஸ்] வரை எல்லா சிந்தனையாளர்களுடனும் அவருக்கு நட்பு இருந்தது.

பாபா, ஒரு பன்முக ஆளுமை. அநீதியைக் கண்டு ஆர்த்தெழும் இயல்பைக் கொண்டவர்.தவறுகள் எங்கே நடந்தாலும் தன் சட்ட ஞானத்தால் தட்டிக்கேட்டவர். இந்திய குடியரசுத் தலைவராக இருந்த பிராமணரான ஆர்.வெங்கட்ராமன் தனது பதவிக் காலத்தில் அரசுப் பணத்தில் திருப்பதி கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்தார். தமது தனிப்பட்ட மத நம்பிக்கைகளுக்காக மக்கள் பணத்தை விரயமாக்கிய ஆர்.வியின் செயலை கடுமையாகக் கண்டித்த பழனிபாபா, 'வெங்கட்ராமன் திருப்பதிக்கு அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்குத் திருப்பி செலுத்த வேண்டும்' என்று கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இப்படி அதிகாரத்தை நோக்கிய உண்மையின் குரலாக ஒலித்த பாபாவை நாடே திரும்பிப் பார்த்தது.

1980 களில் நிகழ்ந்த மீனாட்சிபுரம் மதமாற்றத்தை தொடர்ந்து குமரிமாவட்டம் மண்டைக்காட்டில் நடைபெற்ற கலவரம் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் வரவை அறிவிப்புச் செய்தது. 'இந்து முன்னணி' என்ற மாற்றுப் பெயரில் களமிறங்கிய இந்துத்துவ சக்திகள், அமைதிப்பூங்காவான தமிழகத்தை அமளிக்காடாக்கினர். விநாயகர் ஊர்வலத்தை அறிமுகப்படுத்தி முஸ்லிம்களை வம்புக்கு இழுத்தனர். 'காமவெறியில் விஞ்சி நிற்பவள் கதீஜாவா? அன்னை மேரியா? மணியம்மையா?' என்ற தலைப்பில் பட்டிமன்றங்களை நடத்தினர். முஸ்லிம்களின் உயிருக்கு உயிரான நபிகளாரைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்து வெறிக்கூச்சலிட்டனர்.
ஆர்.எஸ்.எஸ் கும்பலின் இத்தகைய அராஜகச் செயல்களால் தமிழகம் முழுவதும் பற்றி எரிந்தது. கோவை, விழுப்புரம், ஆம்பூர், தேவிப்பட்டினம், ஆத்தூர், சேலம், வாணியம்பாடி, தேங்காப்பட்டினம், திண்டுக்கல், குளச்சல், காயல்பட்டினம், கடையநல்லூர், திருவல்லிக்கேணி, மேட்டுப்பாளையம், பழனி, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, அத்திக்கடை, மேலப்பாளையம், நாகூர் என்று... எங்கு பார்த்தாலும் கலவரம். இந்துத்துவ வெறியர்களின் கோரத் தாக்குதலுக்கு இலக்காகிய முஸ்லிம்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். அத்தகைய இருண்ட சூழலில் ஒளிக்கீற்றாய் உதித்தவர்தான் பழனிபாபா.
ஆர்.எஸ்.எஸ்ஸின் அராஜகங்களைக் கண்டு அஞ்சி நடுங்கிய சமூகத்திற்கு தைரியமூட்டினார், அவர்.பேசவே பயந்து வாய் பொத்தி ஊமையாய்க் கிடந்த சமூகத்திற்கு கேள்வி கேட்க கற்றுத் தந்தார். இந்து முன்னணியின் மதவெறிக் கூட்டங்களுக்கு எதிர் கூட்டம் போட்டு தமது அபாரமான பேச்சுத் திறனால் தக்க பதிலடி கொடுத்தார். அவர் கலவரத்தை விதைத்தவர் இல்லை; கலவரத்தை விதைத்தவர்களுக்கு எதிரான கருத்தை விதைத்தவர்.

இந்துத்துவ மதவெறிக்கு எதிராக களமாடிய அதே வேளையில், முஸ்லிம்களை ஒடுக்கிய அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் வீச்சோடு இயங்கினார், பாபா. முஸ்லிம்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் நடவடிக்கைகளை துணிந்து அம்பலப்படுத்தி வந்த அவர், இடையறாத சட்டப் போராட்டத்தின் மூலம் ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் மிரள வைத்தார். அச்சத்தின் பிடியிலிருந்த முஸ்லிம்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார்.

பாபா மீது நான்கு முறை தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டது. 80 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நூற்றுக்கு மேற்பட்ட முறை சிறை சென்று வந்த அவர், எல்லா ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிந்தார். தடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகும், இந்தியாவிலேயே கைது செய்யப்பட முடியாத ஒரே மனிதராகவும் அவர் இருந்தார்.
இந்துத்துவ கும்பலின் பயங்கரவாத நடவடிக்கைகளை ஜனநாயகத் தளத்தில் நின்று எதிர்கொள்ளும் வகையில், பாபா உருவாக்கிய மக்கள் திரளைக் கண்டு புறமுதுகிட்டு ஓடினார்கள் இந்து முன்னணியினர். பாபாவின் படையை நேருக்கு நேராகச் சந்திக்கும் துணிவற்ற அவர்கள், அதிகாரத்தின் துணையை நாடினார்கள். பாபாவின் பின்னால் அணிவகுத்த இளைஞர்கள் மீது அடக்குமுறைச் சட்டம் பாய்ந்தது. பாபாவின் ஆதரவாளர்கள் குறிவைக்கப்பட்டனர்; கண்காணிக்கப்பட்டனர்; கைது செய்யப்பட்டனர். சிறையிலடைக்கப்பட்ட அனைவருக்கும் சட்ட ரீதியான உதவிகளைச் செய்தார், பாபா. சிறையிலிருந்த முஸ்லிம் இளைஞர்களின் குடும்பங்களைப் பற்றிய விபரங்களைச் சேகரித்து அந்த குடும்பங்களின் செலவினங்களுக்கு மாதந்தோறும் மணியார்டர் செய்து வந்தார். பாபாவின் இத்தகைய குணச்சிறப்பின் காரணமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவர் மீது அபிமானம் கொண்டனர். பாபாவின் படை மேலும் வலிமை பெற்றது.

இந்துத்துவத்தை தனியொரு சமூகமாக நின்று எதிர்க்க முடியாது என்ற நடைமுறை உண்மையைப் புரிந்து கொண்ட பாபா தொடர்ச்சியாக பல வியூகங்களை வகுத்தார். இந்துத்துவத்தால் பாதிக்கப்படும் ஏனைய சமூகங்களையும் இணைத்துக் கொண்டு போராட்டத்தை முன்னெடுத்தார். பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மண்டல் கமிஷனை ஒழித்தது இந்துத்துவம். ஆகவே, இந்துத்துவத்தை எதிர்க்க பிற்படுத்தப்பட்டவர்களே வாருங்கள் என 'டச்சிங்காக' அழைப்பு விடுத்தார்.
தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் ஊருக்கு வெளியே சேரியில் ஒதுக்கி வைத்து வதை செய்கின்றது இந்துத்துவம். ஆகவே, இந்துத்துவத்தை வேரறுக்க தலித் மக்களே அணிதிரள்வீர் என உணர்வுப் பூர்வமாக அறைகூவல் விடுத்தார்.

அத்தகைய அறைகூவலுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்களுடனும், தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்களுடனும் உறவை வளர்த்துக் கொண்டார். வன்னியர் சமூகத் தலைவரான டாக்டர் ராமதாசுடனும், தலித் சமூகத் தலைவரான டாக்டர் சேப்பனுடனும் இணைந்து களம் கண்டார்.

வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக ராமதாஸ் மாற்றிய போது, பா.ம.கவுக்கு ஒரு வெகுஜன அடையாளத்தைப் பெற்றுத் தந்தவர் பழனிபாபா. தனது ஜிகாத் கமிட்டித் தொண்டர்களை பாமகவில் இணைந்து செயலாற்றும் படி ஊக்கப்படுத்தினார். அவரது அறிவுரையை ஏற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் பாமகவில் இணைந்தார்கள்.

அவ்வாறு இணைந்தவர்கள் பட்டி தொட்டியெங்கும் பா.ம.க பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தனர். அந்த கூட்டங்களில் பங்கேற்று பழனிபாபா முழங்கினார். ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நம்பிக்கை நாயகனாக ராமதாசை முன்னிறுத்தினார். வன்னியர் சாதிக்கட்சி என்ற முத்திரையிலிருந்து விலகி, ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சியாக பா.ம.கவை அடையாளப்படுத்துவதற்கு கடுமையாக உழைத்தார்.

பா.ம.க படிப்படியாக வளர்ந்து அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்தது. ராமதாசின் அரசியல் நடவடிக்கைகளில் மெல்லிய மாற்றங்களும் நிகழ்ந்தன. அறிவுக் கூர்மையுள்ள பாபா அதை உணர ஆரம்பித்தார். ராமதாசிடம் ஏற்பட்ட மெல்லிய மாற்றம் ஒரு கட்டத்தில் வலிமையாக வெளிப்பட்டது. பா.ம.க கூட்டங்களில் பாபா பேசிய பிறகு இறுதியாக ராமதாஸ் பேசுவார். பாபாவின் அனல் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கில் திரண்டு நிற்பவர்கள், அவர் பேசி முடித்ததும் கலைந்து சென்று விடுவார்கள். ராமதாஸ் பேசத் தொடங்கும் போது கூட்டம் சில நூறு பேர்களாகச் சுருங்கி விடும். இதுவும் ஒரு வகையில் ராமதாசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. விளைவு; பாபாவை கூட்டங்களுக்கு அழைக்காதீர்கள் என பா.ம.கவினருக்கு ராமதாஸ் வாய்மொழி உத்தரவு போட்டார். பாபாவுக்கும் ராமதாசுக்கும் இடையே முரண்பாடு மேலும் அதிகரித்தது.

அதே காலகட்டத்தில் பால்தாக்கரேயை ஆதரித்து அறிக்கை விட்டார் ராமதாஸ். மேலும் பாஜக தலைவர்களுடன் நெருங்கத் தொடங்கினார். ராமதாசின் கொள்கைத் தடுமாற்றத்தைக் கண்டு கடும் அதிருப்தி அடைந்த பாபா தனது தொண்டர்களிடம், 'முஸ்லிம்கள் பா.ம.கவில் இருக்க முடியாத சூழல் உருவாகிவிட்டது' என வெளிப்படையாகக் கூறினார். பின்னர் அதையே மேடைகளிலும் எதிரொலித்தார்.

1996, சட்டமன்றத் தேர்தலின்போது, புதுக்கோட்டைத் தொகுதியில் பா.ம.க வேட்பாளராகப் போட்டியிட்ட கே.எம்.ஷெரீபை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த பாபா, 'இதுதான் பிற அரசியல் கட்சிக்காக, தாம் பேசுகிற கடைசி பேச்சு என்றும், இனி எந்த அரசியல் கட்சிக்கும் ஓட்டு கேட்க மாட்டேன் என்றும், எதிர்காலத்தில் சமுதாயத்திற்காகவே ஓட்டு கேட்பேன்' என்றும் அறிவிப்பு செய்தார். பா.ம.கவினால் பாபாவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம், தனியொரு அரசியல் கட்சியைக் கட்டமைக்கும் சிந்தனைக்கு அவரைத் தள்ளியது.

எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் அரசியலை எப்படி வென்றெடுப்பது என்ற ஆய்வில் இறங்கினார். இறுதியில்,கேரளாவுக்குச் சென்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் [பிடிபி] தலைவர் அப்துல் நாசர் மதானியை சந்தித்தார். அங்கு முஸ்லிம்களையும், தலித்துகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களையும் இணைத்த அரசியல் வியூகத்தின் மூலம் வலுவான ஜனநாயக சக்தியாக எழுச்சி பெற்றிருந்த மதானியுடனான பாபாவின் சந்திப்பு, அவருக்குப் புதிய நம்பிக்கையையும் தெம்பையும் ஊட்டியது.

முஸ்லிம்களையும், தலித்துகளையும், அரசியல் மைய நீரோட்டத்தில் தவிர்க்க முடியாத தனிப்பெரும் சக்தியாக மாற்றும் வகையில் தமிழகத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சியைத் தொடங்கும் முடிவுக்கு வந்தார் பாபா. தமிழகத்தில் பி.டி.பியை தொடங்கும் முன்னர் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களுடன் கலந்தாலோசிக்குமாறு பாபாவிடம் கேட்டுக் கொண்டார், மதானி.

பாபா கொடிக்காலை சந்தித்தார். அடுத்தக் கட்ட அரசியல் நகர்வு பற்றி விவாதித்தார். பாபாவின் முடிவுகளை மகிழ்ச்சியோடு வரவேற்றார் கொடிக்கால். பின்னர் ஜிகாத் கமிட்டியினருடன் நடைபெற்ற கலந்துரையாடலில், கேரளாவின் பி.டி.பி கட்சியை தமிழ்நாட்டில் தொடங்குவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் விவாதிக்கப்பட்டன. முடிவில் மதானியின் அரசியல் அஜெண்டாவை ஏற்றுக்கொள்வது என்றும், ஜிகாத் கமிட்டியையே அரசியல் கட்சியாக மாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கட்சியைப் பதிவு செய்வதற்கும், கட்டமைப்பை உறுதிப்படுத்துவதற்கும், கிளைகளை விரிப்பதற்கும் பணிகளை முடுக்கி விட்டார், பாபா. தனது பேச்சில் இருந்த வேகத்தைக் குறைத்து, வியூகத்தை கூர்தீட்டினார். தமிழகம் முழுவதுமுள்ள முஸ்லிம் ஜமாத்துகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டார். பாபாவின் அத்தகைய முயற்சிகளுக்கு உடனடி பலன் கிடைத்தது. பல மாவட்டங்களில் ஜமாத்துகள் ஒருங்கிணையத் தொடங்கின.

முஸ்லிம்களை ஒருங்கிணைப்பது; தலித்துகளுடன் உரையாடுவது; இரண்டு சமூகங்களும் இணைந்து அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பது என்ற வியூகம்தான் பாபா கையிலெடுத்த கடைசி ஆயுதம். எதிர்காலத்தில் கட்சிகளின் கூட்டமைப்பு வலுவிழந்து விடும் என்றும், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கூட்டமைப்புதான் வலுப்பெறும் என்றும் பாபா கூறி வந்தார். அத்தகைய கூட்டமைப்பை உருவாக்குவது சாதாரண வேலையல்ல என்றும், அது மிகப்பெரும் அர்பணிப்புக்குப் பின்னரே சாத்தியமாகும் என்றும் அவர் முன்னுணர்ந்தார்.
இத்தகைய அரசியல் நிலைப்பாட்டுடன் களப்பணியை நோக்கி பாபா நகரும் போதுதான் திடீரென படுகொலை செய்யப் பட்டார்.

1997, ஜனவரி 28 ஆம் நாள் இரவு பொள்ளாச்சியில் உள்ள பாபாவின் நண்பர் பசுவராஜ் என்கிற தனபால் வீட்டிற்கு பாபா சென்றார். 30 ஆண்டுகால நண்பரான தனபாலோடு சுமார் ஒரு மணி நேரம் தனிப்பட்ட, குடும்ப விசயங்களைப் பற்றி உரையாடிவிட்டு இரவு 9.30 மணியளவில் அங்கிருந்து விடைபெற்றார். புறப்படுவதற்கு பாபா தனது ஜீப்பில் ஏறி அமர முயன்ற போது, கையில் சிறிய கோடாலி போன்ற ஆயுதத்துடன் பாபாவை நெருங்கிய அந்த மர்ம மனிதன், திடீரென பாபாவின் தலை,நெஞ்சு,உடல் என சரமாரியாக வெட்டினான். பாபா நிலைகுலைந்து சாய்ந்தார்.

அதிர்ச்சியடைந்த பாபாவின் நண்பர் தனபால், 'டேய் டேய்' என சத்தமிட்டுக் கொண்டே அந்தக் கொலைகாரனை விரட்டினார். அப்போது அவன் 'நீ எனக்கு குறி இல்லை, போடா ஒதுங்கி' என அவரைத் தள்ளிவிட்டு ஓடிவிட்டான். சற்று தூரத்தில் நின்றிருந்த அம்பாசிடர் கார் ஒன்றில் தொற்றிக் கொண்ட அவன் தப்பித்து விட்டான்.பாபா படுகொலை செய்யப்பட்ட செய்தி தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஆங்காங்கே கலவரம், கல்வீச்சு, கறுப்புக் கொடி போராட்டம் என எதிர்ப்பு வலுவாக இருந்தது. கனத்த இதயத்தோடும், கண்ணீர் பெருக்கோடும் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் திரளுக்கு மத்தியில், பழனி அருகேயுள்ள புது ஆயக்குடியில் பாபாவின் உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது.
பாபாவின் படுகொலையில் தொடர்புடைய கொலையாளிகள் அனைவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விட்டனர். பாபா கொலை வழக்கை முன்னெடுப்பதற்கும், கொலையாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தருவதற்கும் உருப்படியான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை.

பாபாவின் ஆதரவாளர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது 'கைது செய்யப் பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல' என்றும், அவர்களுக்கு எதிராக வழக்கு நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை என்றும், பாபா படுகொலைக்குப் பின்னணியில் பல மர்ம முடிச்சுகள் இருக்கின்றன என்றும் கூறி அதிர்ச்சியளிக்கின்றனர். அது என்ன மர்ம முடிச்சு என்பதை நம்மால் விளங்க முடியவில்லை.

ஆனால், அவரது படுகொலைக்குப் பின்னால் இருக்கும் அரசியலை நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

பாபா, இந்துத்துவ மதவெறிக்கு எதிராக மிகத் தீவிரமாக சொற்போர் நிகழ்த்திய காலங்களில் கொல்லப்படவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான அரச அடக்குமுறைகளை அம்பலப்படுத்தி மக்களை அணி திரட்டிய காலத்திலும் கொல்லப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்களோடு இணைந்து அவர்களின் அரசியல் அமைப்பை வலுப்படுத்த உழைத்த காலங்களிலும் படுகொலை செய்யப்படவில்லை.

மாறாக, எப்போது அவர் பேச்சைக் குறைத்து, செயல் வீச்சை அதிகரித்து, ஜமாத்துகளை ஒருங்கிணைத்து, முஸ்லிம்களும் தலித்துகளும் இணைந்த அரசியல் பயணத்தை முன்னெடுக்க முயன்றாரோ அப்போதுதான் அவர் படுகொலை செய்யப்பட்டார்.


அப்படியென்றால், எந்த முயற்சி வெற்றி பெறுமோ; எந்த முயற்சி ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு விடிவைத் தருமோ; எந்த முயற்சி முஸ்லிம்களுக்கு உரிய பயனளிக்குமோ...அந்த முயற்சியில் அவர் ஈடுபட முயன்றபோதே கொல்லப்பட்டு விட்டார் என்றால், அதன் பின்னணியில் இருக்கின்ற 'அரசியல்' எது என்பதை ஆய்வு செய்தாக வேண்டும்.

இந்துத்துவத்தின் நேரடித் தாக்குதல்களுக்கு இலக்காகின்ற இரட்டைச் சமூகமான முஸ்லிம்களும், தலித்துகளும் இணைவது இயல்பாகவே சாத்தியமானது. இரு சமூகங்களுக்குமான உறவு இரண்டறக் கலந்தது. இரண்டு சமூகங்களும் பல்வேறு அரசியல் கட்சிகளால் வஞ்சிக்கப்பட்ட வரலாற்றுக்கு உரியது. சரியான தலைமைகள் இன்றித் தடுமாறும் நிலைமையை உடையது. நாடு முழுவதும் வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்திகளாகவும், மக்கள் தொகை அடிப்படையில் ஒருங்கிணைந்த மிகப்பெரிய சமூகங்களாகவும் இருப்பதால், இரண்டு சமூகங்களையும் இணைத்த அரசியல் நடவடிக்கை என்பது இரண்டு சமூகங்களையும் தவிர மற்ற எல்லோருக்கும் சிக்கலானது. இரண்டு சமூகங்களையும் வஞ்சித்து அரசியல் பிழைப்பு நடத்தும் அனைவருக்கும் ஆபத்தானதும் கூட.

எனவே, அந்த இணைப்பு அஜெண்டாவை கையிலெடுப்பவர்கள் பல்வேறு இன்னல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாவார்கள். அரசியல் மைய நீரோட்டத்திலிருந்து அவர்கள் அகற்றப்படுவார்கள்; அல்லது அழிக்கப்படுவார்கள்.

கேரள மாநிலத்தில், முஸ்லிம்களும் தலித்துகளும் இணைந்த அரசியல் அஜெண்டாவை கையிலெடுத்த மதானி, பொய் வழக்குகள் சுமத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு அரசியல் மைய நீரோட்டத்திலிருந்து அகற்றப்பட்டார். அதே வழிமுறையை தமிழகத்தில் கையிலெடுக்க முயன்ற பழனிபாபா அழிக்கப்பட்டார்.

பாபாவின் மறைவுக்குப் பிந்தைய தமிழக முஸ்லிம்களின் அரசியல் போக்கு, இலக்கற்றுத் தடுமாறிக் கொண்டிருப்பதை மீளாய்வு செய்தால் அந்த உண்மை நமக்கு விளங்கும்.

பழனிபாபா, தனது பொதுவாழ்க்கைப் பயணத்தில் முதலில் எம்ஜிஆருடன் நெருக்கமாக இருந்தார். பின்னர் அதே எம்ஜிஆர்தான் தமது ஆட்சிக்காலத்தில் பாபாவின் கூட்டங்களுக்குத் தடை போட்டார். ஒவ்வொரு தடையையும் நீதிமன்றத்தில் சென்று அனாயாசமாகமுறியடித்து, வெற்றிகரமாக கூட்டம் நடத்துவார், துணிச்சல்கார பாபா. இதனால் எரிச்சலடைந்த எம்ஜிஆர் சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்குள் பழனிபாபா நுழையத் தடை என அரசாணை கொண்டு வந்தார்.

பாபாவுக்கும், எம்ஜிஆருக்கும் இடையிலான முரண்பாட்டைக் கவனித்த கலைஞர், எம்ஜிஆரை எதிர்க்க பாபாவை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் கலைஞருடனும் முரண்பட்டார் பாபா. எம்ஜிஆராவது பாபாவின் கூட்டங்களுக்குத் தான் தடை போட்டார். ஆனால் கலைஞரோ, பாபாவைக் கைது செய்து சிறையிலடைக்கும் அளவுக்கு கடுமை காட்டினார்.இறுதியில், டாக்டர் ராமதாசோடு நெருங்கிய பாபா, அவரோடும் முரண்பட்டு விலகினார்.

பழனிபாபா, எம்ஜிஆரையும் கலைஞரையும் ராமதாசையும் சமுதாயத்திற்காகவே ஆதரித்தார்; சமுதாயத்திற்காகவே எதிர்த்தார். சுயநல அரசியலையோ, அல்லது பிழைப்புவாத அரசியலையோ அவர் முன்னெடுத்திருந்தால் எந்தத் தலைவரோடும் அவருக்கு முரண்பாடுகள் ஏற்பட்டிருக்காது. யாரோடும் சமரசமாகி விடாமல் அவர் காத்த கொள்கை உறுதிதான் அவரை தனித்து இயங்க வைத்தது; ஷஹீது அந்தஸ்துக்கு உயர்த்தி வைத்தது.

பாபா மிக இயல்பானவர்; உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர். மனதில் பட்டதை பட்டெனச் சொல்லிவிடும் பழக்கமுடையவர். இன்றைய அரசியல் சமூகத் தலைவர்களுக்கு உரிய, இன்றைய அரசியல் சூழலுக்கு மிகவும் அவசியமான 'நடிக்கும் திறன்' பாபாவிடம் இருந்ததில்லை. அவர் வெள்ளந்தியான மனிதராக இருந்தார்.

பாபாவின் உழைப்பை அவரோ அல்லது அவரது இயக்கமோ அறுவடை செய்யவில்லை. உழைப்பைத்தான் அறுவடை செய்யவில்லை; அவரது இறப்பையாவது அவரது இயக்கம் அறுவடை செய்ததா எனில் அதுவும் இல்லை. அவரது இறப்புக்குப் பிறகு அவரது இயக்கமே இல்லை என்ற நிலையாகி விட்டது.

பாபாவின் இறப்பை அறுவடை செய்தவர்கள் யாரென்றால், பாபா வாழும் காலம் வரை அவரைக் கடுமையாக விமர்சித்தவர்கள் என்பதுதான் மிகப்பெரும் கொடுமை.

பாபாவை, பெண்பித்தர் என்றும், பாபா, முஸ்லிம் இளைஞர்களைத் தவறாக வழிநடத்துகிறார் என்றும் குற்றம் சாட்டி அவருக்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபட்டவர்கள்தான் அவரது இறப்பை பக்கம் பக்கமாக செய்தியாக்கி, முஸ்லிம் இளைஞர்களை உசுப்பேற்றி இயக்கம் வளர்த்தார்கள். பாபாவின் உண்மையான சமூகப் பங்களிப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லாமல் மறைத்தார்கள்.

ஆனால், பாபாவுக்கு 'ஷஹீது' என்னும் மிகப்பெரிய கண்ணியத்தை வழங்கிய இறைவன், அவர் மீது அவதூறு பரப்பிய தறுதலைகளையோ அசிங்கப்படுத்தினான்.

பாபா, இளைஞர்களை வழிகெடுக்கிறார் என்று எந்த மனிதர் பாபா மீது அவதூறு வீசினாரோ, அந்த மனிதரைப் பற்றித்தான் 'எங்களை வழிகெடுத்தார் ; எங்களை குண்டுவைக்கத் தூண்டினார்' என்று சிறை மீண்ட இளைஞர்களைப் பேட்டி கொடுக்கச் செய்தான் இறைவன்.

பாபாவை, பெண்பித்தர் என்று யார் விமர்சித்தார்களோ, அவர்களே ஒருவர் மீது ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி, அசிங்கப்பட்டு, தனித்தனி இயக்கம் காணும் அளவுக்கு அம்பலப்படுத்தினான், இறைவன்.

'அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்பதெல்லாம் வழக்கொழிந்து போன பழமொழியாகிவிட்டது. 'தெய்வமும் அன்றே கொல்லும்' என்பதுதான், பாபாவை எதிர்த்தவர்களுக்கு ஏற்பட்ட இழி நிலையிலிருந்து நமக்குத் தெரியவருகிறது.

பாபா, தாம் பேசும் கூட்டங்களில் எல்லாம் தவறாமல் ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை அளிப்பார். ''I Plead Guilty - நான் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்''.

அப்பாவி மக்கள் மீது அரசியல்வாதிகளின் அராஜகம் பாயும் போது அதை தட்டிக் கேட்பது அயோக்கியத்தனம் என்றால், நான் மிகப்பெரும் அயோக்கியனே!

முஸ்லிம்கள் மீது திராவகம் வீசப்படுவதை தடுக்கப் போனது தீவிரவாதம் என்றால் நான் மாபெரும் தீவிரவாதியே!

ஜனநாயக உரிமைகளைக் கேட்பது சாதிவெறி என்றால் நான் மாபெரும் சாதி வெறியனே!

சகோதரத்துவம் போற்றுவது, சட்டவிரோதம் என்றால் நான் சட்ட விரோதியே!

இஸ்லாத்தின் மாண்புகளை கூறுவது மதவெறி என்றால் நான் மாபெரும் மதவெறியனே!

என் மக்கள் மீது ஏவப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராடுவது குற்றம் என்றால் நான் மிகபெரும் குற்றவாளியே!'' என்றார் பாபா.

அவர் எந்தக் குற்றத்தை இழைத்தாரோ...
அந்தக் குற்றத்தை நாமும் இழைப்பதுதான்
அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக இருக்க முடியும்!

இஸ்லாம் உலகாளும் சக்தியாக மாறவேண்டும் என்பதற்காக உயிரையே தியாகம் செய்த பட்டியலில் சேர்த்துகொண்டாய்.....விடியலை நோக்கி .......

நன்றி : சமநிலைச் சமுதாயம் பிப்ரவரி - 2011 இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை.........

நான்கு மெழுவர்த்திகள் நமக்கு கற்று தரும் நம்பிக்கை !!!




ஓர் இருட்டு அறையில் நான்கு மெழுகுவர்த்திகள் ரம்மியமான அழகோடு ஒளிவீசி கொண்டிருந்தன. சற்று நேரம் சென்றதும் அந்த நான்கில் மூன்று பேச ஆரம்பித்தன.

முதல் மெழுகுவர்த்தி "அமைதி" :
இவ்வுலகில் அமைதி என்கிற நான் இல்லை. எங்கு பார்த்தாலும் சண்டை,வன்முறை, தீவிரவாதம்,கடன் என இருக்கின்றன.அப்படிப்பட்ட உலகில் நான் வசிக்க விரும்பவில்லை என்றவாறு அணைந்துபோனது.

இரண்டாவது மெழுகுவத்தி "உண்மை":
இவ்வுலகில் உண்மை என்கிற நான் இல்லை. எங்கு பார்த்தாலும் பொய்,குழு சண்டை,தேர்தல் வாக்குறுதி, இலவசம் என்றே இருக்கின்றன.அதனால் இங்கு வசிக்க விரும்பவில்லை என்றவாறு அணைந்துபோனது.

மூன்றாவது 
மெழுகுவத்தி "அன்பு":
இவ்வுலகில் அன்பு என்கிற நான் இல்லை. எங்கு பார்த்தாலும்  என்றே பணம்,சுயநலம்,அடிதடி என்பதே பிரதானமாக இருக்கின்றன.நீங்கள் இருவர் மட்டுமின்றி நானும் அணைந்து போனால்தான் இம்மக்களுக்கு புத்தி வரும்,அறியாமை என்கிற இருளில் கஷ்டபடட்டும் என்றபடி தன்னை அணைத்துக்கொண்டது.

இந்த மூன்றும் அணைந்த நிலையில் ஒரு மழலை அந்த அறைக்கு வந்து,அணைந்திருந்த அந்த மூன்று மெழுகுவர்த்திகளை பார்த்தபடி எரிந்து கொண்டிருந்த நான்காவது திரியிடம் சென்றது.மூவரும் ஏன் இப்படி அணைந்தனர் என வினவியது.

நான்காவது மெழுவர்த்தி "நம்பிக்கை":கவலைப்படாதே! நம்பிக்கை என்கிற நான் விடாமுயற்சியுடன் எரிந்து கொண்டிருக்கிறேன்.அணைய மாட்டேன்.அணைந்து போன அமைதி,உண்மை,அன்பு இவற்றை நம்பிக்கை என்கிற என்னை கொண்டு நீ மறுபடியும் ஏற்ற முடியும்.நீ செய்வாயா என்றது.

இதை கேட்ட அந்த மழலை தன் பிஞ்சு கரங்களால் நம்பிக்கை ஒளி கொண்டு மற்ற மூன்றையும் ஏற்ற ஆரம்பித்தது. அறை முழுதும் பிரகாசமானது.


அமைதி,உண்மை,அன்பு மூன்றும் பெரிதுதான் என்றாலும் நம்பிக்கை என்ற ஒளி கொண்டு தான் அடைய முடியும் என்பதை அந்த மழலை உணர்ந்தது. நாம் எப்போது உணர போகிறோம்? 

என்று மாறும் இந்த நிலை?


என்று மாறும் இந்த நிலை?

கனவாக போனதோ நம்
தனி ஈழம்?
நனவாக ஆனதோ
நரிகளின் ஆட்டம்?


கனவாக போனதோ நம்
தனி ஈழம்?
நனவாக ஆனதோ
நரிகளின் ஆட்டம்?

என் தமிழ் இனமே சாகிறது 
பட்டினியால். 
நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்
பேசிக்கொண்டே இருக்கிறோம்;

சண்டை வேண்டாம்,தனிநாடு வேண்டாம்
பணம் வேண்டாம்,பதவிகள் வேண்டாம்;
மேடை பேச்சுக்கள் நம் சகோதரர்களுக்கு
ஒரு வேலை சோறு போடாது;

பாலைவனத்தில் பஞ்சுமேடை
அமைத்தாலும்
பசியாற உணவு வேண்டாமா?
சுடுகாடே என்றாலும்
சுதந்திர காற்றை எம்மக்கள்
சுவாசிக்கவேண்டாமா?

என்று இந்த நிலை மாறும்?
'இருந்திருந்தால் நன்றாக இருக்குமே' என்கிற
இறைவன் 'இருக்கிறேன் ' என்று
காட்சிகொடுத்து எம்மக்களை 
காப்பாற்றுவாரா???னியால். 
நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்
பேசிக்கொண்டே இருக்கிறோம்;

சண்டை வேண்டாம்,தனிநாடு வேண்டாம்
பணம் வேண்டாம்,பதவிகள் வேண்டாம்;
மேடை பேச்சுக்கள் நம் சகோதரர்களுக்கு
ஒரு வேலை சோறு போடாது;

பாலைவனத்தில் பஞ்சுமேடை
அமைத்தாலும்
பசியாற உணவு வேண்டாமா?
சுடுகாடே என்றாலும்
சுதந்திர காற்றை எம்மக்கள்
சுவாசிக்கவேண்டாமா?

என்று இந்த நிலை மாறும்?
'இருந்திருந்தால் நன்றாக இருக்குமே' என்கிற
இறைவன் 'இருக்கிறேன் ' என்று
காட்சிகொடுத்து எம்மக்களை
காப்பாற்றுவாரா???

பாவம் இந்த தமிழர்கள்...!!!

20 நாட்களுக்கு $6,120, இந்திய மதிப்பில் ரூபாய் மூன்று லட்சம். மூன்று வேளை நல்ல கல்யாண சாப்பாடு,தங்க நல்ல அறை,தினம் இரண்டு வேளை பால், காலை மாலை என இரண்டு மணிநேரம் சொற்பொழிவு, ஒரு மணி நேரம் யோகா க்ளாஸ் என இரண்டு மாதத்திற்கு ஒரு 20 நாட்கள் இந்த ப்ரொக்ராம் அந்த ஆசிரமத்தில் நடத்தப்படும். ஒரு குழுவில் 100 பேர்கள்.இதில் கலந்துக் கொள்பவர்கள் அதிகம் பேர் கனடா,இங்கிலாந்து,அமெரிக்காவில் தங்கி இருக்கும் இலங்கை தமிழர்கள்.
அவருக்கு பாத பூஜை செய்ய 25 ஆயிரம் ரூபாய் தனியே கட்டவேண்டும். அந்த இருபது நாட்களும் தினம் ஒரு 50 பேராவது 5 பேர்கள் அடங்கிய ஒரு குழுவாக சேர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி தாம்பாளத்தில் பாத பூஜை செய்ய அனுமதிக்கப் படுவார்கள்.

அகதிகளாய் வாழ போன மக்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் கொடுக்கும் மாத முதியோர் பென்ஷனை இப்படி வேஸ்டாக இந்த ஆசிரமத்திற்கு கொடுத்து ஏமாறுகிறார்கள். எங்கு தான் பிரச்சனை இல்லை. யார் தான் இப்பொழுது நாடு விட்டு நாடு போய் தங்கள் வேர்களை தொலைப்பதில்லை. அவர்கள் பிரச்சனையை தீர்க்க இவரை விட்டால் ஆள் இல்லை என்பதனை போல நன்கு மூளை சலவை செய்யப்பட்டவர்கள். அந்த நாடுகளுக்கு சொற்பொழிவிற்கு போகும் போது எல்லாம் ஒரு வீட்டிற்கு அந்த ஆசிரம சாமியார் விசிட் செய்ய 4 லட்சம் ரூபாய் ஃபீஸாம். தினம் 5 வீடுகளாவது இவர் விசிட்டுவது உண்டாம்.
அவர் பாதம் நம் வீட்டில் பட்டால் நம் பாவங்கள் போய்விடுமாம். அதற்கும் வெயிட்டிங் லிஸ்ட் உண்டு.இதில் பாதி பேர் இலங்கையிலும் அரசாங்க வேலை பார்த்து அந்த அரசாங்கத்திலும் பென்ஷ்ன் வாங்குபவர்கள். அனாமத்தாய் பணம் வந்தால் அதனை இப்படி தான் நாசம் செய்வார்கள் போலும். இந்த வருடம் இலங்கைய்யின் புது அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்துக் கொண்டு இலங்கையில் பென்ஷன் வாங்குபவர்களை ஒழுங்கு படுத்த மற்ற நாட்டு அரசுடன் பேச்சு வார்த்தை தொடங்கி உள்ளது.அதாவது பென்ஷனை நிறுத்துவது இல்லையென்றால் அந்த நாட்டு பென்ஷ்ன் தொகையை குறைப்பது.

தமிழில் பேச்சு வல்லமை உடைய இவரின் குறி வெளி நாட்டில் வாழும் பணக்கார இலங்கை தமிழ் மக்களே. இவர் ஆசிரமத்திற்கு இப்படி 20 நாட்கள் வந்து தங்குபவர்கள் இவர்கள் தான் அதிகம். ஏற்கனவே, மன அமைதி இழந்து தவிக்கும் இந்த மக்கள் சன் சேனல் வீடியோ காட்சியினை எப்படி எடுத்துக் கொள்வார்களோ, 2009 டிசம்பர், ஜானவரி மாத ப்ரோகாமில் இவர்களில் ஒருவராய் இருந்து பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த நடிகையை தினம் பார்த்து பேசிய அந்த குழு உறுபினர்கள் இதனை எப்படி ஜீரணித்து கொள்வார்களோ. இனியாவது பணத்தினை வீணாக்காமல் நல்ல காரியங்களுக்கு செலவிடலாம் இல்லை அவர்கள் வம்சத்திற்காவது சேர்த்து வைக்கலாமே.


பிரச்சனைகள் இவர்களை இப்படி பணம் செலுத்த தூண்டுகிறதா. இல்லை.ஒரு பெரிய ப்ரெஸ்டீஜ் இந்த மக்களை இப்படி பணம் கட்ட தூண்டுகிறது.நீ போனீயா இரு இந்த வருடம் நானும் போய் வருகிறேன் என்ற ஒரு போட்டி மனப்பான்மையால் ஆசிரமத்திற்கு அமோக வாழ்வு. போய் வந்தவர்களை பார்த்து நிறைய பேர் இந்த ஆசிரமத்திற்கு குடும்பம் குடும்பமாக வந்து மூன்று மாதங்கள் எல்லாம் தங்கி செல்கிறார்கள். 20 நாட்களுக்கு 3 லட்சம் என்றால் கணக்கு பார்க்கவும்.

மூன்றே லட்சத்தினை மூன்று மாணவர்கள் படிக்கக் கொடுக்கலாம். இல்லையென்றால் மூன்று ஏழைப் பெண்களின் கல்யாணத்திற்கு உதவலாம். இல்லையென்றால் யாருக்கேனும் ஆபரெஷனுக்கு உதவலாம். இல்லையென்றால் அவர்கள் நாட்டில் இருக்கும் அனாதை ஆசிரமத்திற்கு கொடுக்கலாம்.

இல்லை என்றால் நன்கு ஊர் சுற்றி இந்தியாவின் வளமையான கோயில்களையும், இயற்கையையும் ரசித்துப் போகலாம். இப்படி எத்தனையோ இல்லையென்றால் இருக்கும் போது எப்படி தான் இப்படி பணத்தினை வீணாக்குவார்களோ தெரியவில்லை. எங்கேயும் கிடைக்காத நிம்மதி மூன்று லட்சம் செலவு செய்து 20 நாட்களில் ரெடிமேடாக வாங்கி செல்ல முடியுமா?

அந்த சாமியாராவது வாங்கிய பணத்திற்கு ஒழுங்கு முறையாக இருந்து இருக்கலாம். இல்லை ஜாக்கிரதையாக ரூமில் கேமிரா இருக்கிறதா என்று செக் செய்து இருக்கலாம்.

ஏற்கனவே மனக்கவலையில் அல்லது மன நோயில் இருக்கும் அந்த மக்களுக்கு பெரிய துரோகத்தினை செய்து விட்டார்.

பள்ளிகளுக்கு ஒரு வேண்டுகோள்!!!!

மும்பை ரயில் : உலகிலேயே அதிக பணியாளர்களை கொண்டது இந்திய ரயில்வே துறை. 1.4 மில்லிய்னுக்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். 7000க்கும் அதிகமான ரயில்வே ஸ்டேஷன்கள் இந்தியாவில் உள்ளன.
மும்பை ரயில்வே 6.9 மில்லியன் பயணிகள் தினமும் பயணிக்க உதவுகிறது. இந்தியாவில் முதன் முதலில் 1983-ல் மும்பையிலிருந்து 34 கி.மீ தூரம் உள்ள தானே என்ற இடத்திற்க்கு தான் ரயில் விடப்பட்டது. நம் சென்னையை விட மிக அதிகமான நபர்கள் ரயில்வே லைனை சர்வ சாதாரணமாக கடந்து செல்கிறார்கள்.30 வருடங்களாக டிரைவராக பணியாற்றும் ஒருவர் இதுவரை 75 பேர் தான் பணியிலிருக்கும் போது டிரைனில் அடிப்பட்டு இறந்தாக கூறினார். ட்ராக்கின் நடுவே இறந்தவர் உடல் இருக்ககூடாது எனவே கீழே இறங்கி கார்டுடன் சேர்ந்து உடலை தூக்கி லைன் பக்கதில் வைத்து விட்டு பின் வண்டியை எடுப்போம் என்று கூறினார்.

ஒவ்வொரு வருடமும் 5,000-க்கும் அதிகமான பேர் இங்கு ரயில் விபத்தால் இறக்கிறார்கள். போரினால் கூட இவ்வளவு நபர்கள் இறப்பதில்லை. உலகிலேயே ரயில்வே லைன் அருகில் வசித்து வரும் மக்கள் தொகையும் இங்கு தான் அதிகம். விக்டோரியா டெர்மினஸ் தற்போது சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் (CST) என்று அழைக்கப் படுகிறது.

இவை அனைத்தும் டிஸ்கவரி சேனலில் மும்பை ரயில் என்ற நிகழ்ச்சியில் காண்பிக்கப் பட்டது. ரயில்வேயில் துணி வியாபாரம் செய்யும் ஒரு பெண்மணி தனக்கு இந்த ரயில் தான் பெற்றவர்கள் போல என்று கூறினார். ரயில்வே போலீஸிடம் அடிக்கடி மாட்டி ஃபைன் கட்டினாலும் இந்த தொழிலை தன்னால் விட முடியாது என்றும் கூறினார்.

இரண்டு மணிநேரம் காண்பிக்க பட்ட இந்த நிகழ்ச்சியை பள்ளிகளில் மாணவ்ர்களுக்கு காண்பித்தால் நன்றாக இருக்கும். ஒரு அறையும் அதில் ஒரு டி.வியும் வைத்து இருக்கும் ஒவ்வொரு பள்ளியும் வாரத்தில் ஒரு நாள் ஒரு மணிநேரம் டி.வி காண்பிக்க வேண்டும் என்றாலும் அந்த நேரத்திலும் படிப்பு, படிப்பு என்று தான் நேரத்தினை செலவு செய்கிறார்கள். மாணவர்கள் மிக விரும்பும் நல்ல நிகழ்ச்சிகள் டிஸ்கவரி சேனலில் அதிகம் காண்பிக்கிறார்கள். பள்ளிகள் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை காண்பிக்க ஏற்பாடு செய்யுமா?? நிறைய பள்ளிகள் பின்பற்றுவதில்லை. குழுவாக அமர்ந்து இது மாதிரி நிகழ்ச்சிகளை காணும் போது குழந்தைகளும் தங்கள் வீடுகளில் இது மாதிரியான நிகழ்ச்சிகளை பார்க்க ஆரம்பிப்பார்கள். வீணா போன சீரியல்களில் இருந்து தப்பிப்பார்கள்.

வேட்பாளர்களின் கிரிமினல் கேஸ்...

தமிழ்நாட்டில் இருக்கிற மொத்தம் 234 தொகுதியில போட்டியிடுற வேட்பாளர்களின் எண்ணிக்கை மொத்தம் 724 பேர்களாம்.



அதுல கிரிமினல் கேஸ் பதிவானர்கள் 140 பேர்..அம்மா,அய்யா,கேப்டன் இவர்களையும் சேர்த்து.

அதுல கொலை செய்ய முயற்சித்தவர்கள் என்று கேஸ் இருப்பவர்கள் 25 பேர்..

அதுல 5ஆப்பு வரை படித்தவர்கள் 50 பேர்கள்

அதுல 8 ஆப்பு வரை படித்தவர்கள் 150 பேர்கள்

அதுல 10ஆப்பு வரை படித்தவர்கள் 200 பேர்கள்

டிகிரி வரை படித்தவர்கள் 250 பேர்கள்

முதுகலை படித்தவர்கள் 50 பேர்கள்

வக்கீல்,டாக்டர் மீதம் உள்ளவர்கள்.

பெண் வேட்பாளர்களில் கிரிமினல் கேஸ் இருப்பவர்கள் 4 பேர்

இவர்களில் யாரை தேர்ந்தெடுப்பது?

இப்ப மதுரை மேற்கு எடுத்துகிட்டீங்கன்னா போட்டியிடும் மூவருமே கிரிமினல் கேஸ் பதிவானவர்கள். அதில் இருவர் 10-ஆவதும் ஒருவர் டிகிரியும் படித்து உள்ளனர். அதில் கொலை முயற்சி வழக்கு யார் பேரில் இல்லையோ அவரை தேர்ந்தெடுக்கலாம்.ஆனால்,டிகிரி முடித்தவர் பேரில் கொலைமுயற்சி வழக்கு உள்ளது.எனவே 10 ஆப்பு படித்தவர் தான் ஜெயிப்பாரோ.

அதுவே மதுரவாயல் தொகுதியினை எடுத்துக் கொண்டால் போட்டியிடும் மூவரில் இருவர் செக்‌ஷன் 302(மர்டர் கேஸ்), ஒருவர் செக்‌ஷன் 307 கொலை முயற்சி வழக்கும் பதிவாகி உள்ளது. மர்டரை விட அட்டம்ட் மர்டர் பரவாயில்லை என்பதால் செக்‌ஷன் 307 பதிவாகி உள்ளவருக்கு ஓட்டு போடலாமோ.

அதுவே நாகப்பட்டிணம் தொகுதியினை எடுத்துக் கொண்டால் ஒருவர் அட்மட் மர்டர்,மர்டர் அது இது என்று 10 கிரிமினல் கேஸ்களில் சிக்கி உள்ளார். நல்லவேளை அவர் 10 ஆவது தான் படித்து உள்ளார். எனவே 10 கேஸ்கள் மட்டுமே.இன்னும் படித்து இருந்தால்??

ஆகா, தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் பெரிய கட்சியினை சேர்ந்த மூவருமே கிரிமினல் வழக்குகளில் சிக்கவில்லை. இப்படி மூவருமே நல்லவங்கன்னாலும் குழப்பம் தான்.அதனால்,ரோடு போட்டது யாரு?அந்த ரோடை பாழாக்கியது யாருன்னு தேடணும்.

வேலூர் பரமாத்தி தொகுதியில் போட்டியிடும் ஒருவரின் மேல் 36 கிரிமினல் கேஸ்கள்.மனிதர் எம்.ஏ.பொலிட்டிகல் சயின்ஸ். அடகொக்கமக்கா!!!

அம்மா மேல் 10 கேஸ்கள்.படித்தது 10ஆப்பு.

அய்யா மேல் 1 கேஸ்-எதிர்த்து போட்டியிடுபவர்கள் மேல் ஒரு கேஸும் இல்லை.அய்யாவும் 10 ஆப்பு பாஸ்

கேப்டன் மேல் 1 கேஸ்.இவரும் 10 ஆப்பு பாஸ்

ஸ்டாலின் மேல் நோ கேஸ்-டிகிரி ஹோல்டர்.

இப்படியே பார்த்தோமானால் யாருக்கு ஓட்டு போடறதுன்னே தெரியலை. முதல் முறையாக ஓட்டு போடப்போகும் என் மகன் என்னை கேட்கிறான் யாருக்கும்மா ஓட்டு போடறதுன்னு? ஏண்டா இப்படி ஒரு கேள்வி என்னை பார்த்து கேட்ட?இதற்கு பதில் சொல்றது எவ்வளவு கஷ்டம்டா.எக்ஸாம்னா சாய்ஸில் இந்த கேள்வியினை விட்டுடலாம்.

இந்த கணக்கெல்லாம் தோராயமாக எடுக்க உதவிய தளம் இதோ http://myneta.info/tamilnadu2011

ஆங்சான் சூகி -

சூகிக்கு 65 ஆவது பிறந்தநாள்.

என்ன செய்தார்?: பர்மாவில் ஜனநாயகத்தினை கொண்டு வருவதற்கும் இப்பொழுது அங்கு நிலவி வரும் ராணுவ ஆட்சியினை முடிவிற்கு கொண்டு வருவதற்கும் 20 ஆண்டுளாக போராடி வருபவர் சூகி. பல உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி பர்மா ராணுவ ஆட்சியாளர்கள் இவரை 14 வருடங்களாக வீட்டுக்காவலில் வைத்து உள்ளார்கள்.

யார் இவர்?: 1945-ல் ரங்கூனில் சூகி பிறந்தார்.இவரின் தந்தை ஆங்சான் 1947-ல் கொலை செய்யப்பட்டார்.தற்கால பர்மாவின் தந்தை எனப்படுவார் இவரின் தந்தை. இவருக்கு இரண்டு சகோதரர்கள்.ஒருவர் இளவயதில் இறந்து விட்டார்.இன்னொரு மூத்த சகோதரர் அரசியலில் ஆர்வம் இன்றி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

என்ன படித்தார்?: சூகியின் அம்மா பர்மாவின் வெளிநாட்டு தூதராக இந்தியாவில் வேலை செய்த போது சூகி நம் டில்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் தன் இளங்கலை பட்டம் அரசியல் துறையில் பெற்றார். பின் ஆக்ஸ்ஃபோர்டில் முதுகலை பெற்று மூன்று வருடம் ஐக்கிய நாட்டு சபையில் வேலை செய்தார். அதன் பிறகு லண்டனில் டாக்டர் பட்டமும் பெற்றார்.

யாருடன் திருமணம்?: 1972-ல் கியூபா நாட்டை சேர்ந்த மைக்கேல் ஆரிஸ் என்பவரை மணம் செய்துக் கொண்டார். சூகிக்கு இரண்டு மகன்கள்.இங்கிலாந்தில் வாழ்ந்து வந்தார்.

எப்படி வாழ்க்கையில் திருப்பம்?: 1988-ல் தன் தாயாரை பார்க்க பர்மா வந்த போது அப்போதைய பர்மாவில் அதன் ஆட்சியாளரை விலக்கி விட்டு ஆட்சியினை பிடித்தது ராணுவம்.அதை எதிர்த்து ஒரு புதியக் கட்சியினை ஆரம்பித்து சூகி செய்த பிரச்சாரம் அவருக்கு பெரும் ஆதரவாளர்களை தந்தது. உடனே அவரை கைது செய்தது பர்மா ராணுவ அரசு.1990-ல் நடந்த தேர்தலை பெரும் வெற்றி பெற்றது சூகியின் கட்சி.ஆனால், பிரதமர் ஆக விடாமல் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அவரின் குடும்பம் லண்டனில் இருந்தது. கணவர் கேன்சரில் கஷ்டப்பட்டபோது அவருக்கு பர்மா வருவதற்கு பர்மா அரசு விசா வழங்க மறுத்தது. கணவர் 1999-ல் இறக்கும் வரை தன் மனைவியை 5 முறை மட்டுமே சந்திக்க முடிந்தது. தற்காலிகமாக அவரை 5 முறையும் வீட்டுக்காவலில் இருந்து பர்மா அரசு விடுதலை செய்தது.

திரும்ப பர்மாவிற்கு திரும்ப கூடாது அப்படி செய்தால் முழுவிடுதலை அளிக்கப்படும் என்ற ராணுவத்தின் நிபந்தனையினை மறுத்து இன்றும் வீட்டுக்காவலில் உள்ளார் சூகி.



இப்போது சூகி?: 2008-ல் பர்மாவினை தாக்கிய நர்கீஸ் புயலால் அவரின் வீட்டுக் கூறை இடிந்து விழுந்தது. மின்சாரம் இல்லாத அந்த வீட்டில் இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஒரு வருடம் வாழ்க்கை நடத்தினார். 2009-ல் தான் அரசு அவர் வீட்டினை புணரமைத்தது. காந்தியின் கொள்கைகளில் பெரும் பிடிப்பு உள்ளவர் சூகி. இரண்டு வேலையாட்கள் மற்றும் மருத்துவர் ஒருவர் அவ்வப்போது அந்த வீட்டிற்கு சென்று வர அனுமதி உண்டு. அவரின் மகன்கள் கூட அவரை தொடர்பு கொள்ளகூடாது. அடிக்கடி நோய்வாய் பட்டாலும் வீட்டுக்காவலில் தான் இருக்கின்றார். 2003-ல் அவரின் கர்ப்பபை நோய் காரணமாக அகற்றப்பட்டது. அதன் பின்னரும் அவரை சிறையில் தான் அடைத்தது.

புத்தகங்கள் படித்து தன் பெரும்பான்மையான நேரத்தை கழித்து வருகிறார். உலக நாடுகள் ஏகப்பட்ட பரிசுகள் கொடுத்து அவரை கெளரவித்து உள்ளது. 1991-ல் நோபல் பரிசு பெற்றார். அவர் சார்பாக அவரின் மகன்கள் பரிசினை பெற்றனர். அந்த பணத்தினை மேல் படிப்பு படிக்கும் எளிய பர்மிய மாணவர்களுக்கு கொடுத்து விட்டார்.

காந்திய கொள்கைகளில் மிக பிடிப்பு உள்ள சூகி காந்திய வழியில் போராடி வருகிறார். ஐக்கிய நாட்டு சபையும் தன்னாலான முயற்சிகளை அவரை விடுவிக்க எடுத்து வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பர்மாவில் பொது தேர்தல் வர இருக்கிறது. எனவே, சூகி இப்போது விடுதலை ஆவார் என்று அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர். அடுத்த ஆண்டு இந்த தினம் அவர் விடுதலை பெற்ற ஒரு தலைவராக உலா வர கடவுளை பிராத்திப்போம்.

யோச்சி யோகாய்...

இரண்டாம் உலகப்போரின் போது 1944ல் அமெரிக்க படைகள் பசிபிக்கடலில் இருக்கும் தங்களுக்கு சொந்தமான குவாம் தீவினை ஜப்பானிடமிருந்து கைப்பற்றியது. அப்போது ஜப்பான் நாட்டினை சேர்ந்த நிறைய வீரர்கள் குவாம் தீவின் அடர்ந்த காடுகளில் மறைந்து கொண்டனர். இரண்டாம் உலகப்போரும் முடிவிற்கு வந்தது.

1972-ல் ஒரு விசித்திர மனிதனை குவாம் தீவின் டெலஃபோஃபோ என்ற கிராமத்தினை சேர்ந்த இருவர் நதிக் கரையோரமாக பிடித்து போலீசில் கொடுத்த போது அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். யோச்சியோகாய் என்ற அந்த ஜப்பானியர் 1944-ல் காட்டில் அமெரிக்க படைகளுக்கு பயந்து ஒளிந்துக் கொண்டவர் என்று தெரிய வந்தது.28 வருடங்கள் காட்டில் வாழ்ந்து உள்ளார். 18 வருடங்களாய் இவருடன் இன்னும் இரண்டு வீரர்களும் வாழ்ந்து உள்ளனர்.ஒவ்வருவராக இறந்து விட்டனர்.பசியால் அவர்கள் இறந்து இருக்கக்கூடும் என்று தெரிவித்தார். கடைசி 8 வருடங்கள் தனியாக வாழ்ந்து உள்ளார். ஜப்பான் படையில் சேரும் முன்னர் டெய்லராக இருந்து உள்ளார். மரப்பட்டைகளை கொண்டு உடைகளை செய்து உள்ளார்.

ஒரு குகையில் வாழ்ந்து உள்ளார்.மூங்கில் கம்புகளை கொண்டு தன் குகையினை மூடி வைத்துக் கொள்வாராம். பக்கத்தில் இருந்த ஓர் நீரோடையில் குளித்து, அந்த தண்ணீரினை குடித்தும் வாழ்ந்து உள்ளார். தன் தாய் எம்பிராய்ட் செய்து தந்த ஒரு துணியும்,ஜப்பான் நாட்டு கொடியும் அவரின் குகையிலிருந்தது. அத்தனை வருடங்களும் உப்பு சேர்க்காத உணவினை உண்டு வாழ்ந்து உள்ளார். எலி,மான்களை பிடித்து வேகவைத்து உணவாக சாப்பிட்டு உள்ளார். கனிகள்,தேங்காய் முக்கிய உணவாக சாப்பிட்டு உள்ளார். போர் முடிவிற்கு வந்து விட்டது என்று தெரிந்து இருந்தும் வெளியில் வர பயமாய் இருந்ததாய் தெரிவித்தார்.

ஜப்பானுக்கு அழைத்துக் கொள்ளப்பட்டார். இரத்த சோகையினை தவிர எந்த நோயும் அவருக்கு இல்லை. அந்த ஆண்டே மிஹோகோ என்ற 44 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இயற்கையுடன் வாழ்வது எப்படி என்று தொலைக்காட்சியில் நிறைய நிகழ்ச்சிகள் நடத்தினார். 1991-ல் அப்போதைய ஜப்பான் மன்னரால் கெளரவிக்கப்பட்டார். அவருக்கு அரசு பென்ஷன் வழங்கியது.இறக்கும் முன் அடிக்கடி குவாம் தீவிற்கு போய் வந்தார்.
1997-ல் தனது 82ஆவது வயதில் ஹார்ட் அட்டாக்கில் மருத்துவமனையில் இறந்தார்.விசித்திரமான மனிதர் தான்.

விளையாட்டு செய்தி

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு ஒவ்வொரு முறையும் ஒரு லக்கி மேஸ்காட் (Mascot)தேர்ந்து எடுக்கப்படுகிறது.அதுவே அந்த விளையாட்டிற்கு விளம்பரத்திற்கும் பயன்படுகிறது.அது விளையாடும் நாடுகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாய் நம்பப் படுகிறது.

முதல் முறையாக 1982-ல் 9ஆவது ஏசியாட் டில்லியில் நடந்த போது அப்பு என்ற குட்டி யானை அதிர்ஷ்ட சின்னமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் முதல் முதலில் கலர் டெலிவிஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அந்த விளையாட்டுக்கள் கலரில் ஒளிபரப்பபட்டது. குருவாயூரிலிருந்து ஸ்பெஷல் ட்ரையினில் 36 யானைகள் இந்த விளையாட்டு தொடக்க விழாவிற்கு டில்லி கொண்டு செல்லப்பட்டன.அப்பு என்ற அந்த யானையின் பெயர் குட்டி நாராயணன். இந்தியர் அனைவரையும் மிகவும் கவர்ந்தது இந்த 5 வயது அப்பு.
7 வயதில் செப்டிக் டேங்கில் விழுந்து அடிப்பட்டு அந்த புண்ணின் காரணமாகவே சிகிச்சை பெற்று 2005-ல் குருவாயூரில் இறந்தது.


1986-ல் கொரியாவில் நடந்த போட்டிக்கு கொரிய புலி தேர்ந்து எடுக்கப்பட்டது. இந்த போட்டியின் போது தான் பி.டி.உஷா 4 தங்கப்பதக்கங்களை வென்றார்.1 வெள்ளி பதக்கமும் வென்றார். தங்க மங்கை, பயோலி எக்ஸ்பிரஸ் எனப்பெயர் பெற்றார்.


11 ஆவது போட்டி சைனாவில் நடந்தது.PAN PAN எனப்பட்ட பாண்டா கரடி அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டது.


12ஆவது போட்டி 1994-ல் ஜப்பானில் ஹிரோஷிமா நகரில் நடந்தது. அப்போது இரண்டு வெள்ளை வாத்துக்கள் Poppo and Cuccu அமைதியினையும்,ஒற்றுமையையும் அறிவுறுத்த தேர்ந்து எடுக்கப்பட்டது.


13 ஆவது போட்டி 1998-ல் தாய்லாந்தில் நடைபெற்ற போது Chai-Yo என்ற யானை தேர்ந்து எடுக்கப்பட்டது. சந்தோஷத்தையும், வெற்றியினையும் திருப்தியினையும் குறிக்கிறது.


14 ஆவது போட்டி தெற்கு கொரியாவில் நடைப்பெற்றது. கடல் பறவை அதிர்ஷ்டமாக தேர்ந்து எடுக்கப்பட்டது. துரியா என்று அழைக்கப்பட்டது.ஆசிய நாடுகளிடையே ஒற்றுமையினை ஏற்படுத்த தேர்ந்து எடுக்கப்பட்டது.



15 ஆவது போட்டிகள் கத்தாரில் தோஹாவில் நடத்தப்பட்டது. அப்போது orry எனப்படும் ஒரு வகை ஆடு தேர்ந்து எடுக்கப்பட்டது.



இந்த முறை 2010 -ல் 16 ஆவது ஏசியாட்டிற்கு படத்தில் உள்ள ஐந்து ஆடுகள் தான் அதிர்ஷ்ட சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஆட்டின் பெயர் லீயாங் யாங் என்பதாகும்.அது தான் மற்ற ஆடுகளுக்கு தலைவராக விளங்குகிறது. ஐந்து ஆடுகள் உள்ள இந்த சின்னம் ஆசியாவில் நல்ல சுபிட்சத்தையும், ஏற்றத்தையும், அமைதியினையும், வெற்றியினையும், ஆசிய மக்களுக்கு சந்தோஷத்தினையும் ஏற்படுத்த வேண்டும் என்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. சைனாவில் ஆடு ஒரு லக்கியான மிருகமாக பார்க்கப்படுகிறது. ஏசியாட் எனப்படும் ஆசியன் கேம்ஸ் சைனாவில் க்வாங்ஷோ நகரில் 12 நவம்பர் தொடங்கியது.அந்த நகரமே சிட்டி ஆஃப் கோட்ஸ் எனப்படுகிறது. அங்கு பெரும் பஞ்சம் வந்த போது வானத்தில் இருந்து ஆடுகளில் வந்த தேவதைகள் அந்த பஞ்சத்தினை போக்கி மக்களுக்கு அரிசியை கொடுத்துச் சென்றதாக கதை உள்ளது.

இது வரை தாய்லாந்தில் 4 முறை இந்த விளையாட்டு நடத்தப்படுள்ளது. இந்தியாவில், ஜப்பானில் இரண்டு முறை நடத்தப்பட்டுள்ளன.இந்த விளையாட்டு போட்டியில் மொத்தம் 46 நாடுகள் கலந்துக் கொள்கின்றன. ஆனால், 9 நாடுகளில் மட்டுமே இந்த விளையாட்டுப் போட்டிகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.இஸ்ரேல் 1974 லிற்கு பின் இந்த அமைப்பில் இருந்து வெளியேறி விட்டது.

சில விளையாட்டுக்கள் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆண்டுகள்:
கபடி போட்டி - 1990.
கராத்தே போட்டி -1994.
டேக் வாண்டோ -1994.
கிரிக்கெட் போட்டி-2010.


17 ஆவது போட்டி 2014-ல் தெற்கு கொரியாவில் நடத்த முடிவு செய்ய பட்டுள்ளது. மூன்று seal இதற்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளன. காற்றையும், ஆட்டத்தினையும், வெளிச்சத்தையும் குறிக்கும் வகையில் இவை தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

எகிப்தில் என்ன நடக்கிறது?

புரட்சியாளர்கள் யார்?

ஏப்ரல் 6 யூத் மூவ்மெண்ட் என்ற அமைப்பினை சேர்ந்தவர்கள் முஸ்லீம் சகோதரத்துவ கட்சியுடன் சேர்ந்து புரட்சியினை ஜனவரி 25, 2011-ல் ஆரம்பித்தனர். இந்த அமைப்பு எல் மஹாரா-எல் குப்ரா என்ற மிக பெரிய தொழில் நகரில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக 2008, ஏப்ரல் 6-ல் ஸ்ட்ரைக் செய்வதற்காக ஏற்படுத்த பட்டது.

புரட்சியாளர்களை பற்றிய ஒரு முன்னுரை:

அகம்மது மஹர், அகம்மது சலா என்ற இருவர் ஃபேஸ் புக்கில் இந்த யூத் மூவ்மெண்டினை ஆரம்பித்தனர். ஏப்ரல் 6 அன்று கருப்பு ஆடை அணிந்து வீட்டிலேயே இருக்கும் படி பணிநிறுத்தம் செய்பவர்களிடம் ப்ளாக், facebook, ட்விட்டர், ஃப்லிக்கர் போன்ற சமுதாய வலைதளங்களில் அறிவித்துக் கொண்டனர்.
இதற்கு முன் அரசியலில் ஈடுபடாத சுமார் 70,000 படித்த மக்கள் இதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.பேச்சு சுதந்திரம், நாட்டின் பொருளாதார வீழ்ச்சி பற்றி எழுச்சி மிகு கட்டுரையினை எழுதினர்.  செர்பியாவில் 2000த்தில் நடந்த புரட்சியினை தங்களுக்கு முன்னுதாரணமாய் கொண்டனர்.  2008-ல் அஹம்மது மஹர் கைது செய்ய பட்டார். சமுதாய வலைதளங்கள் தடை செய்யப் பட்டன. ப்ளாக்கர்களும்,கவிஞர்களும், பத்திரிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஏப்ரல் -6 அமைப்பினரே இப்போது புரட்சியினை எகிப்தில் ஏற்படுத்தி உள்ளனர். எகிப்தில் ஏற்பட்டுள்ள இந்த புரட்சிக்கு லோட்டஸ் புரட்சி என்று பெயர்.டுனிஷியாவில் நடந்த ஜாஸ்மின் புரட்சி தான் இந்த லோட்டஸ் புரட்சிக்கு முன் உதாரணம்.

காலித் சைத் (28) என்ற இளைஞன் போலீஸ் அத்து மீறலை, ஊழலை இணையத்தில் வெளியிட்டதால் ஒரு மாதம் முன்பு அவன் போலீசாரால் கொல்ல பட்டான்.அவன் போதை மருந்து சாப்பிட்டு இறந்தான் என்று போலீஸ் சொல்வதை மக்கள் நம்பவில்லை. காலித்தின் மரணத்தினை எகிப்து மக்கள் மன்னிக்க, மறக்க தயாராக இல்லை. காலித் சைத்தின் இணையம்


தற்சமயம் நீதிபதிகளும், இராணுவத்தினரும் இப்போராட்டத்தில் பங்கு பெற்று வருகின்றனர். இராணுவத்தினர் இது வரை எந்த நாட்டிலும் புரட்சியாளர்களுடன் கைகோர்த்தது இல்லை. பொது மக்களும் புரட்சியில் பங்கேற்று வருகின்றனர்.
புரட்சிக்கு காரணம் என்ன?

எந்த நேரத்திலும் யாரையும் விசாரணையின்றி கைது செய்யும் போலீசின் அடக்கு முறை, குறைந்த சம்பளம், ஊழல், வேலையின்மை இவைகளை எதிர்த்தும்,பொதுத் தேர்தலை நடத்தக் கோரியும்,பேச்சு சுதந்திரம் கேட்டும் இந்த விலைவாசி ஏற்றத்தினை எதிர்த்தும் புரட்சி வெடித்து உள்ளது. எமர்ஜென்சி சட்டத்தினை எதிர்த்தும் இந்த புரட்சி. தலைநகர் கெய்ரோவிலும், சூயஸ்,அலெக்ஸாண்டிரியா என்ற நகரத்திலும் புரட்சி ஏற்பட்டுள்ளது.

முக்கியமாய் அதிபர் ஹோஸினி முபாரக்கினை பதவி விலக கோரியே இந்த புரட்சி ஏற்பட்டுள்ளது.


யாரை எதிர்த்து புரட்சி? இதோ இவரை தான்.



முகமது ஹோஸினி சையது முபாரக்(82) எகிப்தில் 1981-லிருந்து 2011 வரை 30 வருடங்கள் ஜனாதிபதியாக இருக்கிறார்.அதற்கு முன்னால் எகிப்தின் ஏர்ஃபோர்சில் பணியாற்றியவர். ஜனாதிபதியான இவர் 6 முறை கொலை முயற்சியில் இருந்து தப்பியவர். நம் இந்தியா போல் அல்லாது இங்கு ஜனாதிபதிக்கு தான் அதிக பவர்.பாராளுமன்ற ஜனநாயகம் போல் இந்த அரசு இல்லை. தான் ஆட்சிக்கு வந்ததும் 1958-ன் எமர்ஜென்சி சட்டத்தினை தவிர்க்காமல் அதை இன்னும் இறுக்கமாக்கினார். இவருடைய இளைய மகன் கேமல் முபாரக்(47)லண்டனுக்கு பறந்து விட்டார் என்று செய்தி.அப்பா மண்டையை போட்டால் அடுத்த ஜனாதிபதி ஆகலாம் என்ற கனவுடன் இருந்தவர். மூத்த மகன் ஆலா முபாரக் அரசியலில் விருப்பம் இல்லாதவர். 

புரட்சியின் விளைவுகள்:

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் அதனை அங்குள்ள இராணுவத்தினர் நடை முறை படுத்தவில்லை. 
இந்த புரட்சியில் ஜனவரி 30 வரை 150 பேர் இறந்ததும், 1500 மனிதர்கள் காயமடைந்தும், 750 போலீசார் காயமடைந்தும் உள்ளனர்.

ஹாசினி முபாரக், உளவு துறை தலைவர் ஓமர் சுலைமான்(74 வயது) என்பவரை ஜனவரி 29-ல் துணை ஜனாதிபதியாக்கி உள்ளார்.இந்த தாத்தா இதற்கு முன்னால் இலாகா இல்லாத மந்திரியாகவும், உளவுத்துறை டைரக்டராய் இருந்தவர்.  பவர்ஃபுல் ஸ்பை என்று பெயர் வாங்கியவர்.

ஹோசினி முபாரக், அஹம்மது சாபிக்(69) என்பவரை அரசு அமைக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார். சஃபிக் பிரதம மந்திரியாக ஜனவரி 31-ல் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவர் எகிப்தின் ஏர்ஃபோர்ஸ் கமாண்டராக இருந்தவர். பிறகு ஏவியேஷன் மந்திரியாக இருந்தவர்.எகிப்தின் ஏர்போர்ட்டுகளை மிகவும் மாடர்னாக மாற்றியவர்.

இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை எகிப்தில் இருந்து திரும்பி அழைத்துக் கொண்டு உள்ளன. யாரும் எகிப்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டன.

எகிப்து அரசு இணையத்தினையும், செல்ஃபோன் பயன்பாட்டினையும் சரியாக பயன்படுத்த முடியாத படி முட்டுக்கட்டை போட்டுள்ளது. ஆனால்
Hacktivism மூலமாக எகிப்தியர்கள் இவை இரண்டினையும் உபயோகப்படுத்த முடிகிறது. 

முபாரக் அடுத்த செப்டம்பர்,2011 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும், அரசியலமைப்பில் சில மாறுதல்கள் செய்ய இருப்பதாகவும் பிப்ரவரி 1-ல் அறிவித்து உள்ளார். இந்த எகிப்தின் மண்ணில் தான் தான் சாக விரும்புவதாகவும்,இந்த நாட்டை விட்டு செல்ல மாட்டேன் என்றும் அறிவித்து உள்ளார். ஆனால், புரட்சியாளர்கள் உடனே முபாரக் பதவி விலக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பிப்ரவரி 2 மதியம் முபாரக்கின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதில் 13 பேர் இறந்தும், 600 பேர் காயமடைந்தும் இருக்கின்றனர். 9 நாட்களாக புரட்சி நடந்து வருகிறது. பிப்ரவரி 2-ல் புது திருப்பமாக முபாரக்கின் ஆதரவாளர்கள் 20 ஆயிரம் பேர் களத்தில்.

லிபியா,அல்ஜீரியா,ஏமன் முதலிய நாடுகளில் புரட்சி வெடிக்கலாம் என தெரிகிறது. பெட்ரோலின் விலை இன்னும் ஏறுவதற்கு சாத்தியங்கள் உள்ளன.தினம் 2.4 மில்லியன் பேரல் ஆயில் எகிப்தில் இருக்கும் சூயஸ் கால்வாய் வழியாக வருவதால் புரட்சி நீடித்தால் இன்னும் விலையேற்றம் ஏற்படும்.

வெள்ளிக் கிழமைக்குள் பிப்ரவரி 4,அதிபர் பதவி விலக வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோள். நேற்று ஏற்பட்ட மோதல் காரணமாக ராணுவம் போராட்டக்காரர்களை போராட்டத்தினை கைவிட கோரி அழைப்பு விடுத்துள்ளது. 

அடுத்த தலைவர் யார்?
முகம்மது முஸ்தஃபா எல்பராடி(68):

ஜனவரி 27-ல் தஹ்ரிர் ஸ்கொயரில் நடந்த புரட்சியாளர்கள் கூட்டத்தில் உரையாற்றி உள்ளார். பிப்ரவரி 1-ல் ஒரு மில்லியன் மக்கள் இந்த ஸ்கொயரிலும், அடுத்து உள்ள தெருக்களிலும் கூடி உள்ளனர். அடுத்து அமைய போகும் புதிய அரசிற்கு மக்கள் விரும்பினால் தலைமை தாங்குவதாய் அறிவித்து உள்ளார்.முஸ்தஃபா எல்பராடி ஒரு வக்கீல் ஆவார். இவர் 2005 அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.அனாதை இல்லங்களுக்கு தான் பெற்ற தொகையினை கொடுத்து விட்டார்.

ஐக்கிய நாட்டு சபையின் இண்டர்நேஷனல் அட்டாமிக் எனர்ஜி ஏஜன்சியின்(IAEA) டைரக்டராய் பணி புரிந்தவர்.மூன்று முறை இந்த பதவியினை வகித்தார். (1997-2009).உலக அளவில் நோபல் பரிசினை தவிர உலக அளவில் 18 பரிசுகளை வாங்கி உள்ளார்.இவரின் மகள் லண்டனில் வக்கீலாகவும், மகன் கெய்ரோவில் ஐடி மேனஜராகவும் இருக்கிறார்கள். வியன்னாவில் வசித்து வந்தார். பெரும்பான்மையான வருடங்கள் இவர் கெய்ரோவில் இருக்கவில்லை என்பது இவரது பலகீனம்.நேஷனல் அசோஷியேசன் ஃபார் சேன்ஞ் என்ற அமைப்பினை ஏற்படுத்தி உள்ளனர்.தடை செய்யப்பட்ட இயக்கமான முஸ்லீம் சகோதரத்துவக் கட்சி, அராப் லீக் இயக்கிதனரினை இவர் சந்தித்து இருக்கலாம் என்று செய்தி.இவர் ஜனவரி 30-லிருந்து இப்போது வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

அமெரிக்கா ஒரு பக்கம் முபாரக்கினை ஆதரித்துக் கொண்டே புரட்சியாளர்களை ஊக்குவிப்பதாக விக்கிலீக்ஸ் இணையதளம் ஆதாரங்களை வெளியிட்டு உள்ளது.செப்டம்பர் தேர்தலுக்கு முன்பாகவே முபாரக்கினை பதவி விலகிட செய்யுமாறு அமெரிக்கா நினைத்துள்ளதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டு உள்ளது.எகிப்தில் உள்ள அமெரிக்க தூதரகம் புரட்சியாளர்களுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்பு வைத்துள்ளதாக கூறுகிறது.
 20 முதல் 35 வயதுடைய ஏறத்தாழ 1,60,000 எகிப்து ப்ளாகர்கள் அரேபிய மற்றும் ஆங்கிலத்தில் முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக எழுதி வந்துள்ளனர்.

இந்தியாவும், எகிப்தும்:  நாசர்-நேரு காலத்தில் இருந்தே இரு நாட்களும் நட்புறவுடன் பொருளாதார மேம்பாட்டுக்காக உடன்படிக்கை செய்த வண்ணமே உள்ளன. 2008 நவம்பரில் ஹோஸ்னி முபாரக் இந்தியாவிற்கு வருகை தந்து மன்மோகன் சிங்கினை சந்தித்து பேசினார். அணிசேரா நாடுகளின் அமைப்பில் இரு நாடுகளும் உறுப்பினர்கள். எகிப்தில் நடந்த அணிசேரா நாடுகளின் கூட்டத்தில் கலந்துக் கொள்ள 2009-ல் மன்மோகன் சிங் எகிப்திற்கு சென்றார்.எகிப்து இந்தியாவிற்கு 3.30 மணிநேரம் பின்னால் இருக்கிறது. சர்க்கரை,பருத்தி ஆடைகள், பருத்தி நூல்களை,சணல்,பிளாஸ்டிக், ரப்பர், கெமிக்கல்ஸ் முதலியன இந்தியா எகிப்திற்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவின் ஓபராய் ஹோட்டல் கெய்ரோவில் உள்ளது.ஏசியன் பெயிண்ட்ஸ்,ரான்பாக்ஸி,டாட்டா மோட்டார்ஸ், அசோக் லேய்லாண்ட்,யூனிட் ட்ரஸ்ட் ஆப் இந்தியா,டாபர் இந்தியா போன்ற கம்பெனிகள் எகிப்தில் உள்ளன.

நம் பதிவர் துபாய் ராஜாவிடம், அவர் எகிப்தில் இன்னும் இருந்தால் மற்ற செய்திகளை எதிர்ப்பார்க்கலாம்.

சாவி யார் கிட்ட இருக்கு?

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு போய் இருக்கீங்களா? வெயில் நேரத்தில் போனால் கொஞ்சம் பரவாயில்லை.மழை நேரத்தில் என்னை மாதிரி மிக தைரியமானவர்கள் போகலாம். வெங்காயம் அங்காச்சும் கம்மி விலையில் கிடைக்காதா என்ற நப்பாசையில் தைரியமா போனேன்.

இனி கோயம்பேடு மார்க்கெட் பற்றி..

மொத்த ஏரியா: 275 ஏக்கர்.

மார்க்கெட் செயல்படும் ஏரியா: 60 ஏக்கர்.ஆசியாவிலேயே மிக பெரிய மார்க்கெட்.

மொத்தகடைகள்:3500.பூக்கடை,காய்கறிகடை,பழக்கடை

தினம் வருகை தருபவர்கள்:ஒரு லட்சம் பேர்.

வருகை தரும் லாரிகள்: 700

லாரிகள் உள்ளே வருவதற்கு கலெக்ட் செய்யப்படும் தொகை:4 கோடி(ஒரு வருடத்திற்கு)

ஒரு நாள் கழிவு :160 டன்.

திட்டம்: தினக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க 5.5 கோடியில் ஒரு மையம் ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது மூடப்பட்டுள்ளது.

இப்பொழுது கழிவுகள் கொட்டப்படும் இடம்: மார்க்கெட் சுற்றி உள்ள இடமே.

பஸ்ல அல்லது கார்ல போகும் போது மார்க்கெட் வந்துடுச்சுன்னு எப்படி கண்டுபிடிப்பது:ஒரு மைலுக்கு முன்னாடியே மூக்கை பொத்திக் கொள்வீர்கள்.அப்படின்னா மார்க்கெட் நெருங்கிடுச்சுன்னு அர்த்தம்.

குப்பை போட்ட குற்றம் யார் மீது: சுத்தம் செய்யும் ராம்கே கம்பெனி சொல்லுது கடைக்காரர்கள் அவர்களுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியில் குப்பையினை போடுவதில்லை.அதில் தண்ணீர் பிடித்து வைக்க உபயோகிக்கிறார்கள்.கடைக்காரர்கள் சிலர் அந்த கேன்களை தங்கள் வீட்டிற்கு கொண்டு வைத்துக் கொண்டனர் என்றும் சொல்கிறது. சுத்தம் செய்ய தினம் ஒரு மூன்று மணிநேரமாவது மார்க்கெட் க்ளோஸ் செய்ய வேண்டும் என்றும் கேட்கிறார்கள்.

கொடுங்கையூர் குப்பை மேடு தினம் மாலை 5 மணிக்கு மூடிவிடுவதால் எங்களால் அங்கு கொட்டமுடிவதில்லை என்று கடைக்காரர்கள் சொல்கிறார்கள்.

எதிர்காலம்: 13 கி.மீ செயிண்ட்தாமஸ் மவுண்ட்- கோயம்பேடு மெட்ரோ ரயில் 2013-ல் முடிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.அதுவும் முடிந்தால் இன்னும் இன்னும் அதிக மக்கள் மார்க்கெட்டிற்கு போவார்கள். அதற்குள் மூடப்பட்ட அந்த திடக்கழிவு மின்சார மையத்தின் சாவி எங்கே இருக்கிறது என்று கண்டுப்பிடித்து திறக்க வேண்டும்.இல்லைனா ஆசியாவிலேயே அதிக நாற்றமடிக்கும் மார்க்கெட் என்று தான் பெயர் கிடைக்கும்.

ஒரு யூனிட் மின்சாரத்தினை ரூபாய் 4.50 கொடுத்து வாங்கிக் கொள்ள மின்சார துறை ரெடியாக இருக்கிறது.ஏன் அதிக பணம் போட்டு ஆரம்பித்த அந்த மையத்தினை இப்படி மூடி வைத்து மார்க்கெட்டினை நாற அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு வேளை அந்த மையத்தின் சாவி குப்பையில் காணாமோ போச்சோ???






               வெங்காயத்தை வாங்க போன நான் வெங்காயத்தை நல்லா பார்த்துட்டு வந்துட்டேன்.

புத்தம் புதுசா, சுத்தமா, குளிர்ச்சியா..


கட்டாயம் அனைவரும் போக வேண்டிய, பார்க்க வேண்டிய இடம்.அந்த இடத்தின் உள்ளே இருந்தாலே வெளியுலகம் மறந்து போகுது.இது வரை நான்கு தளங்களில் மக்களை அனுமதிக்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் மற்ற தளங்களிலும் மக்கள் அனுமதிக்கப் படுவார்கள்.கலைஞர் செய்த மிக அருமையான பணி இது.


இனி சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் பற்றி.

அடிக்கல் நாட்டப்பட்ட நாள்: ஆகஸ்டு 16, 2008.

தொடங்கப்பட்ட நாள்: 15, செப்டம்பர், 2010.

திறந்து வைத்தவர்: முதல்வர் திரு.கருணாநிதி.

நூலகம் இருக்கும் இடம்: காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம்.

மொத்த செலவு: 172 கோடி.

மொத்த ஏரியா: 8 ஏக்கர்.

மொத்த பணியாளர்கள்: 200 நபர்கள்.

 1250 நபர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து படிக்க முடியும்.

நுழைவு பகுதி: ஐந்து அடி உயரத்தில் கையில் புத்தகத்துடன் உட்கார்ந்து இருக்கும் அறிஞர் அண்ணாவின் வெண்கல சிலை.

மொத்த தளங்கள்: 9, தரைத் தளத்தினையும் சேர்த்து.

தரைத்தளம்: ரிசப்சன் பகுதி, ப்ரெய்லி முறையில் படிப்பவர்களுக்கான புத்தகங்கள், இரண்டு கான்ப்ரென்ஸ் ஹால்கள்.

முதல் தளம்:குழந்தைகளுக்கான புத்தகங்களும்,நியூஸ்பேப்பர்கள், வார, மாத பத்திரிக்கைகளுக்கான இடமும், அனைத்து மொழி பத்திரிக்கைகளும் இருக்கின்றன.பெரிய ஹாலும்

இரண்டாவது தளம்: முழுவதும் தமிழ் புத்தகங்கள்.140 நபர்கள் அமரக்கூடிய புத்தக வெளீயீட்டு விழா நடத்த ஒரு ஹால்.

மூன்றாவது தளம்:  சமூகவியல், தத்துவம், உளவியல் புத்தகங்கள்.

நான்காவது தளம்: கம்யூட்டர் சயின்ஸ், மருத்துவம், இஞ்சினியரிங் புத்தகங்கள்.

எட்டாவது தளம்: எங்களை போன்றவர்கள் நூலகத்திற்கு கொடுத்த புத்தகங்களை வைக்கப் போகிறார்கள். நாங்கள் 80 ஆங்கிலப் புத்தகங்கள் கொடுத்தோம். என் மகன் காலேஜில் மார்ச் மாதம் கொடுத்து வந்தான்.எங்கள் பெயர் போட்டு தனி செல்ஃபில் வைப்பார்களா??

முக்கியமான செய்தி:ஃபுட் கோர்ட் திறக்கப் போகிறார்கள்.படிக்கும் போது தான் ரொம்ப பசிக்குது.

நூலகம் திறந்து இருக்கும் நேரம்: காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை.

புத்தகங்களின் எண்ணிக்கை: 12 லட்சம்.

கலைஞர் கொடுத்த புத்தகங்கள்:1000 புத்தகங்கள். இரண்டாவது தளத்தில் தனியாக ஒரு அடுக்கில் கலைஞர் பெயர் போட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன
அனைத்தும் புத்தம் புதுசாய் இருக்கின்றன.

இன்னும் முடிக்கப்படாதவை:

1200 சீட் கொண்ட பெரிய ஆடிட்டோரியமும், மொட்டைமாடியில் 800 பேர் தரையில் அமரக்கூடிய திறந்த வெளி அரங்கு(amphitheatre), 1000 கார்களும், அதற்கு மேற்ப்பட்ட இரு சக்கர வாகனங்களும் நிறுத்தக் கூடிய பார்க்கிங் ஏரியா.

இது வரை கலைஞர் தவிர யாரும் உறுப்பினராக சேரவில்லை. உறுப்பினர் சேர்க்கை பற்றியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.என்னை இரண்டாவதுஉறுப்பினராக சேர்த்துக் கொள்ள சொன்னேன்.
இன்னும் கணனிமயமாகவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

 நூலகத்தினை ஒட்டி 180 நபர்கள் அமரக்கூடிய உணவகம் திறக்கப்பட உள்ளது. அதன் மேல் தளத்தில் ஆய்வாளர்கள் தங்கி இருக்க அறைகள் கட்டப்படுகின்றன.

ஒவ்வொரு தளத்திலும் இண்டர்நெட் வசதி செய்யப்படுகின்றன.

அனைத்து புத்தகங்களிலும் RFID (radio frequency identification device)  என்னும் மைக்ரோ சாதனம் பொருத்தப்படும்.திருட்டுதனமாய் யாரேனும் புத்தகத்தை வெளியே எடுத்து செல்ல முயன்றால் அந்த சாதனம் காட்டிக் கொடுக்கும்.

493 இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப் படுகின்றன. இரவில் யாரும் கட்டிடத்திற்குள் நுழைந்தாலும் இருட்டில் படம் பிடித்து விடும்.


ஓலைச்சுவடிகள் முதல் E-புக்ஸ் வரை அனைத்தும் உள்ளன.


டிஜிட்டல் நூலகம் யுனெஸ்கோவின் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

நிறைகள்:

1.குழந்தைகளுக்கான பகுதியில் சுவரில் கார்ட்டூன் சித்திரங்களும், ஹாலின் நடுவில் ஒரு செயற்கை மரமும் அசத்தலாய் இருக்கிறது. கம்யூட்டரும், ஹெட்ஃபோனும், 1000 புத்தம் புதிய, சி.டிக்களும் இருந்தன.அருமையான இருக்கைகள் சிறுவர்களுக்கு, ஒரு விளையாட்டு கூடமும் உள்ளது.

2.மற்ற தளங்களில் உட்கார போடப்பட்டுள்ள சோபாக்கள் தரமானவைகளாய் உள்ளது. எழுதுவதற்காக போடப்பட்டுள்ள டேபிளும், அமரும் சேர்களும் வசதியாக உள்ளன.

3.லிப்ட்டும், அதனை இயக்க உதவியாளர்களும் உள்ளனர்.

4.அனைத்தும் புத்தம் புது வாசனையான புத்தகங்கள்.

5.ஒவ்வொரு தளத்திலும் கழிப்பறைகள் இருக்கின்றன.

6.கண்ணாடி சுவர்கள், ஜன்னல்கள்,எனவே படிக்கும் இடங்கள் நல்ல வெளிச்சமாய் இருக்கிறது. வெளியில் வேடிக்கைப் பார்க்கவும் முடிகிறது.

7.முழுவதும் குளிர்சாதன வசதி.

8.குழந்தைகளுக்கு உயரம் குறைவான சேர்களும், டேபிள்களும்.

குறைகள்:

பஸ் போக்குவரத்து அதிகம் இல்லாத பகுதியில் நூலகம் உள்ளது.

டாய்லெட்டுகளில் தரை எங்கும் தண்ணீர் தேங்கி இருக்கிறது. தரை சமமாய் போடவில்லையா அல்லது உபயோகிப்போரின் செயலா தெரியவில்லை.பொது இடங்களில் சுத்தமற்ற கழிப்பறைகள் தான் நம் தலையெழுத்து போல.கூட்டம் அதிகம் இல்லாத போதே இந்த நிலைமை. இப்போதைக்கு இது இரண்டும் தான் குறை.

பஸ்/ட்ரையின்: 21G,5C,47C, MRTS கோட்டூர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி
ஆட்டோவில் போகலாம்.இனிமேல் அதிக பஸ்கள் அரசு இயக்கும் என எதிர்ப்பார்க்கலாம். இந்த ரூட்டில் பஸ்கள் அனைத்தும் கூட்டமாக தான் செல்கின்றன.

பெண்களுக்கான அட்வைஸ்: ரிசப்ஷனில் பெண்களின் கைப்பைகளை டோக்கன் போட்டு வாங்கி வைத்துக் கொள்ளகின்றனர். எனவே. ஒரு பர்சும் கொண்டு சென்றால், அதில் பணம், பேனா, மூக்குக் கண்ணாடி, செல் ஃபோன், டோக்கன்,சீப்பு! ஆகியவற்றை வைத்து உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கிறார்கள்.

வெளிநாட்டில், வெளி ஊரில் இருக்கும் தமிழர்களுக்கான அட்வைஸ்: அடுத்து சென்னை வரும்போது கட்டாயம் விசிட் செய்யுங்கள்.நேரம் இல்லை என்று எல்லாம் சொல்ல கூடாது. ரங்கநாதன் தெருவிற்கு அடுத்த முறை செல்லலாம்.


                                         சிறுவர் பகுதி

முகப்புத்தோற்றம்